பிரதமர் லீ சியன் லூங், புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் தமது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டார்.
"தமிழர்கள் இன்று (14-4 -2022) புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களும் வைசாகி தினத்தைக் கொண்டாடு கின்றனர். இதே காலகட்டத்தில் மலையாளம், தெலுங்கு, மேற்கு வங்க சமூகத்தினர் முறையே விஷு, உகாதி, பொஹெலா பைஷாக் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
"ஏப்ரல் மாதம் முழுவதும் வெவ்வேறு சமூக, சமயத்தினர் இந்திய புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். நமது வேறுபட்ட கலாசார, இனப் பிரிவுகள் சிங்கப்பூரின் வளமான பன்முகத்தன்மையை இது காட்டுகிறது.
"தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் இப்போது நமது பண்டிகைகளைக் கொண்டாட முடிந்தாலும் கொவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விழிப்புடன் இருங்கள்," என்று பிரதமர் தமது ஃபேஸ்புக் பதிவில் புத்தாண்டைக் கொண்டாடும் இந்தியர்களைக் கேட்டுக்கொண்டார்.
"தத்தம் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற வேண்டும்," என்றும் பிரதமர் லீ வாழ்த்தினார்.
தமது ஃபேஸ்புக் பதிவுடன் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ குரு சிங் சாபா சீக்கிய கோயிலின் படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

