மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான மாலதி தாஸ் தமது 53வது வயதில் கால மானார்.
இளம் வயதிலேயே மாலதி தைரியத்துடன் செல்படக்கூடியவர். ஆறு வயதாக இருக்கும்போது சைக்கிளிலிருந்து தமது சகோதரியைத் தள்ளிவிட்ட சிறுவனை அவரும் தள்ளிவிட்டார்.
இது குறித்து அவரது தந்தை கேட்டபோது சிறுவனை மட்டும் அப்படிச் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும் என்று பதில் கேள்வி எழுப்பினார். இந்த மறக்க முடியாத சம்பவத்தை நேற்று இறுதிச் சடங்கின்போது அவரது சகோதரி ஷிலா நினைவுகூர்ந்தார். மாலதி தாஸ் செவ்வாய்க்கிழமை பக்கவாதத்தால் காலமானார்.

