ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு சுமார் 1.2 மில்லியன் பேர் இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்து உள்ளனர்.
வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று புனித வெள்ளி காரணமாக விடுமுறை, மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தொடர்ந்து வருவதால் அதிகமானோர் ஜோகூருக்குச் செல்லவிருக்கின்றனர்.
வியாழன் மாலை 5.00 மணி நேர நிலவரப்படி 662,900 பேர் ஜோகூர் கடற்பாலம் மற்றும் துவாஸ் 2வது பாலம் வழியாக சிங்கப்பூரிலிருந்து சென்றுள்ளனர் என்று சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் நேற்று தெரிவித்தது.
இவர்களில் 229,800 பேர் நடந்தும் பேருந்து வழியாகவும் சென்றனர்.
232,800 பேர் கார்களில் சென்றுஉள்ளனர். எஞ்சிய 200,300 ேபர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இந்த நிலையில் 601,700 பேர் தரை வழியாக சிங்கப்பூர் வந்துள்ளனர்.
இவர்களில் 208,500 பேர் நடந்தும் அல்லது பேருந்து வழியாகவும் எல்லைகளைக் கடந்துள்ளனர். 207,800 பேர் கார்களிலும் 185,400 பேர் மோட்டார் சைக்கிளிலும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிமையி லிருந்து (ஏப்ரல் 8) ஞாயிறுவரை இதற்கு முந்தைய வாரத்தைவிட பயணகளின் எண்ணிக்கை 62 விழுக்காடு கூடியதாகவும் ஆணை யம் சொன்னது.