ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர்-மலேசிய எல்லைகளை 1.2 மில்லியன் ேபர் கடந்துள்ளனர்

ஏப்­ரல் 1ஆம் தேதி சிங்­கப்­பூர்-மலே­சிய எல்­லை­கள் திறக்­கப்­பட்ட பிறகு சுமார் 1.2 மில்­லி­யன் பேர் இரு நாடு­க­ளுக்கு இடையே பய­ணம் செய்து உள்­ள­னர்.

வரும் நாட்­களில் இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இன்று புனித வெள்ளி கார­ண­மாக விடு­முறை, மற்­றும் சனி, ஞாயிறு விடு­முறை தொடர்ந்து வரு­வ­தால் அதி­க­மா­னோர் ஜோகூ­ருக்­குச் செல்­ல­வி­ருக்­கின்­ற­னர்.

வியா­ழன் மாலை 5.00 மணி நேர நில­வ­ரப்­படி 662,900 பேர் ஜோகூர் கடற்­பா­லம் மற்­றும் துவாஸ் 2வது பாலம் வழி­யாக சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சென்­றுள்­ள­னர் என்று சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

இவர்­களில் 229,800 பேர் நடந்­தும் பேருந்து வழி­யா­கவும் சென்­ற­னர்.

232,800 பேர் கார்­களில் சென்று­உள்­ள­னர். எஞ்­சிய 200,300 ேபர் மோட்­டார் சைக்­கி­ளில் சென்­ற­னர்.

இந்த நிலை­யில் 601,700 பேர் தரை வழி­யாக சிங்­கப்­பூர் வந்­துள்­ள­னர்.

இவர்­களில் 208,500 பேர் நடந்­தும் அல்­லது பேருந்து வழி­யாகவும் எல்­லை­க­ளைக் கடந்­துள்­ள­னர். 207,800 பேர் கார்­க­ளி­லும் 185,400 பேர் மோட்­டார் சைக்­கி­ளி­லும் சிங்­கப்­பூர் வந்­துள்­ள­னர்.

கடந்த வெள்ளிக்கிமையி லிருந்து (ஏப்ரல் 8) ஞாயிறுவரை இதற்கு முந்தைய வாரத்தைவிட பயணகளின் எண்ணிக்கை 62 விழுக்காடு கூடியதாகவும் ஆணை யம் சொன்னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!