46.4% புதிய பட்டதாரிகள் முழுநேர வேலை பெற்றனர்

46.4% புதிய பட்டதாரிகள் முழுநேர வேலை பெற்றனர்

2 mins read
e417d266-4c8e-42c8-bfd8-d669be987abf
-

தனியார் கல்விநிலைய பட்டதாரிகள் வேலை நியமனம் பற்றிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆய்வு

சிங்­கப்­பூ­ரில் தனி­யார் கல்வி நிலை­யங்­களில் பட்­டம் பெற்ற புதிய பட்­ட­தா­ரி­களில் சுமார் பாதிப்­பேருக்குப் படிப்பை முடித்த ஆறே மாதங்­க­ளுக்­குள் முழு­நேர வேலை கிடைத்­துள்­ளது.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் இயக்­கம் நடத்­திய ஆய்வு மூலம் இது தெரி­ய­வந்­துள்­ளது.

தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த புதிய பட்­ட­தா­ரி­களில் 46.4 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­நேர வேலை கிடைத்­தது என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட ஆகப் புதிய 'பட்­ட­தா­ரி­கள் வேலை நிய­மன ஆய்வு' தெரி­வித்­தது.

என்­றா­லும் இந்த அளவு முந்தைய ஆண்டு பட்­ட­தா­ரி­க­ளின் வேலை நிய­மன அள­வான 49%ஐ விட குறைவு.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், புதிய பட்­ட­தா­ரி­களில் 85.3% வேலை­யில் அமர்ந்­த­னர். அந்த வேலை­களில் பகு­தி­நேர வேலை, தற்­காலிக வேலை­களும் அடங்­கும்.

தன்­னாட்சி பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­க­ளு­டன் ஒப்­பிட்டு பார்க்கை­யில் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை வாய்ப்­பு­கள் கொஞ்­சம் குறை­வா­கவே இருப்­ப­தாக ஆய்வு தெரி­விக்­கிறது. 2021ல் பட்டம் பெற்ற தன்­னாட்சி பல்­கலைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான ஒட்­டு­மொத்த வேலை நிய­மன விகி­தம் 94.4% ஆக இருந்­தது.

முழு­நேர நிரந்­தர வேலை நிய­மன விகி­தம் 84% ஆக இருந்­தது.

தனி­யார் கல்வி நிலைய புதிய பட்­ட­தா­ரி­க­ளுக்­கான மொத்த சரா­சரி மாத சம்­ப­ளம், முழு­நேர வேலை­யில் அமர்ந்­த­வர்­க­ளுக்கு $2,989 ஆக இருந்­தது. இது தன்­னாட்சி பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­க­ளைப் பொறுத்தவரை $3,800.

தேசிய சேவைக்­குப் பிந்­தைய தொழிற்­ப­டிப்பு பட்­ட­தா­ரி­க­ளுக்­கான இந்­தச் சம்­ப­ளம் $2,614 ஆக இருந்­தது. இந்த ஆய்வு, முழு­நேர இள­நிலை புற­ பட்டக் கல்விச் செயல்­திட்­டங்­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 2,900 பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை வாய்ப்­பு­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தி­யது.

இவ்­வே­ளை­யில், தனி­யார் கல்வி நிலைய புதிய பட்­ட­தா­ரி­களில் 27.9 விழுக்­காட்­டி­னர், இறு­தித்­தேர்வு எழு­தி­ய­தற்­குப் பிறகு ஆறு மாதம் கழித்­தும் வேலை தேடிய நிலை­யிலேயே இருந்­தார்­கள். அல்­லது பகு­தி­நேர, தற்­கா­லிக வேலை­க­ளைப் பார்த்து வந்­தார்­கள் என்­றும் ஆய்வு குறிப்­பி­டு­கிறது.

இந்த அளவு தன்னாட்சி பல்கலைக்கழகங்கள், தேசிய சேவைக்குப் பிந்தைய தொழிற்படிப்பு பட்டதாரிகள் ஆகியோரின் அளவை விட அதிகமாகும்.