நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

2 mins read
3f8b3703-3874-4371-a611-66b1b0b0bfb4
-

வாடிக்­கை­யா­ளர்­கள் நம்பி ஒப்­படைத்த $479,876 பணத்தை முன்னாள் வழக்­க­றி­ஞர் ஒரு­வர் தவ­றா­கக் கையாண்­டார் என்று கூறப்­ப­டு­கிறது.

குர்­டேப் சிங் பாலா சிங், 69, என்ற அந்த வழக்­க­றி­ஞர் மீது நம்­பிக்கை மோசடி செய்­ததாக நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

சிங் வழக்­க­றி­ஞ­ராக வேலை பார்த்­த­போது 2011ஆம் ஆண்­டுக்­கும் 2016ஆம் ஆண்டுக்­கும் இடை­யில் மூன்று வாடிக்­கை­யா­ளர்­களின் பணத்­தை அவர் தவறா­கக் கையாண்டு உள்ளதாகக் கூறப்­படு­கிறது என்று இந்த வழக்கு தொடர்­பான அறிக்கை ஒன்­றில் காவல்­துறை கூறியது.

வாடிக்­கை­யா­ளர் ஒவ்­வொ­ரு­வரி­டம் இருந்­தும் $21,000 முதல் $320,000 வரையிலான தொகையை அவர் தவறாகக் கையாண்டு இருக்­கி­றார் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

உச்ச நீதி­மன்ற வழக்­க­றி­ஞர்­கள் பட்­டியலில் இருந்து 2018ல் நீக்­கப்­பட்ட பிற­கும் திரு டே காய் ஜாய் என்ற வாடிக்கையாளருக்­காக 2019ல் சட்ட ஆவ­ணங்­களைத் தயார் செய்­த­தா­க­வும் சிங் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு உள்ளது.

'குர்டேப் சிங் சியோங் அண்ட் பார்ட்­னர்ஸ்' என்ற நிறு­வனத்­தில் அவர் வழக்­க­றி­ஞ­ராக வேலை பார்த்­தார்.

சட்ட ஆலோ­ச­னைக்­காக வழக்கை ஒத்­தி­வைக்­கும்­படி நீதி மன்­றத்தை சிங் கேட்­டுக்­கொண்­டார். அவர் பின்­னொரு தேதி­யில் நீதி­மன்­றத்­தில் முன்­னிலை­யா­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நம்பிக்கை மோசடி தொடர்பில் குற்றவாளி என்று தீர்ப்பானால் 20 ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம் விதிக்க முடியும்.

ஆறு மாதச் சிறை, $25,000 அபராதம் இரண்டும், நீதிமன்ற நடைமுறைக்காக ஆவணங்களைத் தயார்செய்யும் வழக்கறிஞராக செயல்பட்டதற்கான அதிகபட்ச தண்டனையாக அவருக்குக் கிடைக்கலாம்.