சட்டவிரோதமாக வானூர்தியை இயக்கினார்; $51,000 அபராதம்

சட்டவிரோதமாக வானூர்தியை இயக்கினார்; $51,000 அபராதம்

1 mins read
d418fd1b-6a3b-4a56-8e79-effae4a14d95
தண்டனை பெற்ற ஜேசன் இங் யோக் சென். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆளில்லா வானூர்தி ஒன்­றைச் சட்­ட­விரோ­த­மாக பறக்­க­விட்ட ஆட­வ­ருக்கு நேற்று $51,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

ஜேசன் இங் யோக் சென், 43, என்ற அந்த ஆட­வர் செய்த இந்­தச் செய­லால் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு விமா­னப் படை­யைச் சேர்ந்த இரண்டு விமா­னங்­களைத் திசை திருப்­பி­விட நேர்ந்­தது. ஆகா­யத்­தில் மோதல் ஆபத்து சூழல் காரணமாக 30 நிமி­டம் விமான ஓடு­பா­தையை மூட­வேண்­டிய நிலை­யும் அதனால் ஏற்­பட்­டது.

ராணுவ விமா­னங்­க­ளைத் திருப்­பி­விட வேண்­டிய நிலை­யும் ஓடு­பா­தையை மூட­வேண்­டிய நிலை­யும் ஏற்­பட்ட முதல் சட்­ட­வி­ரோத வானூர்திச் சம்­ப­வம் இதுவே என்று விசா­ர­ணை­யில் அர­சாங்­கத் தரப்பு தெரி­வித்­தது.

இத­னி­டையே, வானூர்­தியைச் சட்­வி­ரோ­த­மாக பறக்­க­விட்­ட­தற்­காக இந்த அள­வுக்கு அதிக அப­ரா­தம் இது­வரை யாருக்­கும் விதிக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெரி­ய­வந்­து உள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

ஜேசன் இங் மூன்று குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அப­ரா­தத்­தைச் செலுத்­த­வில்லை என்­றால் அவர் 100 நாள்கள் சிறை­யில் இருக்க வேண்­டும். இந்த வானூர்­திச் சம்­ப­வம் 2020ஆம்­ ஆண்டு செப்­டம்­பரில் கார்ப்பரேஷன் ரோடு பகுதியில் நிகழ்ந்­தது.