மலேசியாவில் இருந்து விற்பனைக்காக 2020ஆம் ஆண்டில் 400 கிலோவுக்கும் அதிக எடையுள்ள காய்கறிகளைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த லீ இயூ லிம் என்பவருக்கு நேற்று $4,250 அபராதம் விதிக்கப்பட்டது.
'டிஎஸ்ஒய்டி' என்ற நிறுவனத்தின் இயக்குநரான லீக்கு, அந்தக் குற்றச்செயல் நடக்காமல் தடுக்க தவறியதற்காக அதே அளவு அபராதமும் விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் உணவு முகவையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் நேற்று இதனைத் தெரிவித்தன.
உட்லண்ட்ஸ் தளபத்தியத்தில் பணியில் இருந்த சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள், 2020 நவம்பர் 17ஆம் தேதி டிஎஸ்ஒய்டி நிறுவனத்திற்கு வந்த வாகனம் ஒன்றை சோதனையிட்டனர்.
பிறகு நடந்த புலன்விசாரணை மூலம் சட்டவிரோத காய்கறி கடத்தல் பற்றி தெரியவந்தது.

