எண்ணெய்யை திருட பெரும் சதித்திட்டம்: 12 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு

2 mins read
0ef24e0a-238c-498d-a364-f2b8afaa034e
(இடமிருந்து) ஏ. துரைசாமி, ஆனந்த் ஓம்பிரகாஷ், நூர்லிமான் பக்டி, எர்வின் சுகார்டி ஜமாலுதின், லீ பீன் லியான், முகம்மது கைருல் அஸ்ரி முகம்மது ஹனாஃபியா ஆகிய இவர்கள் ஆறு பேரும் நேற்று குற்றம் சுமத்தப்பட்ட 12 பேரில் அடங்குவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புலாவ் புக்­கோம் தீவில் உள்ள 'ஷெல் ஈஸ்டர்ன் பெட்­ரோ­லி­யம்' நிறு­வ­னத்­தி­டம் இருந்து எண்­ணெய்­யைத் திருட இடம்­பெற்ற பெரிய அள­வி­லான ஒரு சதித்­திட்­டத்­து­டன் தொடர்­பு­டைய 12 பேர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் ஊழல் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

எண்­ணெய் கப்­பல்­களில் ஏற்­றப்­படும் எண்­ணெய்­யின் அளவைப் பரி­சோ­திப்­ப­தற்­காக அந்த 12 பேரை­யும் நிறு­வ­னத்­தின் மதிப்­பீட்டு ஆய்­வா­ளர்­க­ளாக ஷெல் நிறு­வ­னம் நிய­மித்து இருந்­தது.

எண்­ணெய்யை அங்­கீ­கா­ரம் இல்­லா­மல் ரக­சி­ய­மாக ஏற்­றி­வி­டு­வதற்குக் கைமா­றாக அவர்­க­ளுக்கு பணம் கொடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த விவ­ரங்­களை ஊழல் ஒழிப்பு புலன்­வி­சா­ரணை இலாகா அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

அந்த 12 பேரும் கடந்த 2014ஆம் ஆண்­டிற்­கும் 2017ஆம் ஆண்­டிற்­கும் இடை­யில், ஷெல் நிறு­வ­னத்­தின் முன்­னாள் ஊழி­யர்­க­ளி­டம் இருந்து குறைந்­த­பட்­சம் மொத்­தம் US$ 213,000 (S$288,000) லஞ்­சம் வாங்கி இருக்­கி­றார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

முகம்­மது அலி முகம்­மது நூர், 55, என்­ப­வர்­தான் ஆக அதி­க­மாக அதா­வது US$90,000 தொகையை லஞ்­ச­மா­கப் பெற்று இருக்­கி­றார், அதில் $39,000 கொடுத்து பிஎம்­டபிள்யூ வாக­னம் ஒன்றை வாங்கி இருக்­கி­றார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

ஏ. துரை­சாமி, 60, ஜஸ்பிர் சிங் பரம்ஜித் சிங், 37, ஆனந்த் ஓம்­பி­ர­காஷ், 37, நூர்­லி­மான் பக்டி, 40, எர்­வின் சுகார்டி ஜமா­லு­தின், 38, லீ பீன் லியான், 57, நுஷாத் கரிம் தெங்­குர், 45, முகம்­மது கைருல் அஸ்ரி முகம்­மது ஹனா­ஃபியா, 38, கும­ரன் ரத்ன கும­ரன், 40, பர­மா­னந்­தம் ஸ்ரீநி­வா­சன், 39, ரிஷால் ஸுல்­கி­ஃப்லி, 38 ஆகி­யோர் குற்­றம் சுமத்­தப்­பட்ட இதர 11 பேர்.

இந்­தச் சதித்­திட்­டம் தொடர்­பில் ஷெல் நிறு­வ­னத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான ஜுவாண்டி புங்­காட் என்­ப­வ­ருக்கு சென்ற மார்ச் 31ஆம் தேதி 29 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

முசா­ஃபர் அலி கான் முகம்­மது அக்­ரம், ரிச்­சர்ட் கோ சீ கியோங் ஆகிய இதர இரண்டு முன்­னாள் ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.

இந்­தச் சதித்­திட்­டம் தொடர்­பில் குறைந்­த­பட்­சம் 26 பேர் மீது நீதி­மன்­ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது. இது­வரை மூன்று பேர் குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு அவர்­களில் இரு­வ­ருக்குத் தண்­டனை கிடைத்­துள்­ளது.