ஜோகூர் செல்ல நீண்ட வரிசை

ஜோகூர் செல்ல நீண்ட வரிசை

2 mins read
dc60a4ab-1d75-44de-bac4-d049cd83c784
ேஜாகூர் கடற்பாலத்திற்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி 100 மீட்டருக்கும் மேல் நீளமான வரிசையில் பயணிகள் திரண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புனித வெள்­ளிக்­கி­ழ­மை­யான நேற்­றைய தினம் சிங்­கப்­பூ­ருக்­கும் மலேசி­யா­வுக்­கும் இடையே உள்ள தரை­வழி எல்­லை­கள் திறக்­கப்­பட்ட பிறகு வந்த முதல் பொது விடு­முறை நாள். இந்­நா­ளு­டன் வார இறுதி நாள்­களும் சேர்ந்து வரு­கின்­றன.

இதைத் தொடர்ந்து மலேசியா செல்ல உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டிக்கு அருகே மக்­கள் பலர் நீண்ட வரி­சை­யில் திரண்­ட­னர். நேற்று காலை சுமார் எட்டு மணிக்கு 200க்கும் அதி­க­மா­னோர் வரிசையில் நின்றதாக இப்­ப­கு­திக்கு நேரில் சென்ற ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

இங்குள்ள நடை­பா­தை­யில் கூட்ட நெரி­சல் ஏற்­பட்­டது. அத­னால் மக்­களை வரி­சை­யில் நிற்­கச் செய்ய குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­களும் காவல்­து­றை­யி­ன­ரும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

ஒழுங்­காக வரி­சை­யில் நிற்­கு­மா­றும் ஒரு­வரை ஒரு­வர் தள்­ள­வேண்­டாம் என்­றும் அதி­கா­ரி­கள் மக்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­னர்.

உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்­தத்­தை­யும் தாண்­டிய வரி­சை­யின் நீளம் 100 மீட்­ட­ருக்­கும் அதி­க­மாக இருந்­தது.

எனி­னும், வரிசை தொடர்ந்து நகர்ந்­து­கொண்­டி­ருந்­த­தாக அங்கிருந்த சிலர் தெரி­வித்­த­னர். நேற்று காலை ஒன்­பது மணி­ய­ள­வில் மழை பெய்­தது. ஆனால் இங்கு திரண்­ட­வர்­கள் மழை­யைப் பொருட்­ப­டுத்­த­வில்லை.

காலை சுமார் 10 மணிக்கு மலேசி­யா­வுக்­குச் சொந்­த­மான ஜோகூர் கடற்­பா­லப் பகு­தி­யில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட பல வாக­னங்­கள் அங்கு காணப்­பட்­டன.

மதியம் 12 மணியளவில் மழை நின்றவுடன் போக்குவரத்து சற்று சீரானது. மழை பெய்­த­போ­தும் புனித வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று மலே­சியாவுக்குச் செல்­வ­தில் உற்­சா­க­ம­டைந்­த­தா­கப் பலர் தெரி­வித்­த­னர்.

தனது உற­வி­னர்­க­ளு­டன் ேஜாகூர் செல்­ல பல கால­மா­கத் திட்­ட­மிட்­ட­தாக ஈராண்­டா­டு­களில் முதன்­மு­றை­யாக மலே­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட 54 வயது திரு­வாட்டி நிஷா ஹனீஃப் கூறி­னார்.

உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவடிக்கு அருகே இவ்­வ­ளவு நீள­மான வரிசை உரு­வா­கும் என்­று தான் எதிர்­பார்க்­க­வில்லை என்று சிங்­கப்­பூ­ர­ரான 29 வயது ஜேன் டே சொன்­னார். எனி­னும், வரிசை வேக­மாக நகர்ந்­த­தைக் கண்டு ஆச்­ச­ரி­யப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இம்­மா­தம் ஒன்­றாம் தேதி­யன்று சிங்­கப்­பூர்-மலே­சிய தரை­வழி எல்லை­கள் மீண்­டும் முழு­மை­யாகத் திறக்­கப்­பட்­டன.

அதற்­குப் பிறகு 1.2 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் தரை­வ­ழி எல்­லை­க­ளைக் கடந்துள்­ள­தாகக் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­தது.

எல்லைக் கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பிறகு வந்த முதல் பொது விடுமுறை நாள்