தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஆபத்து நேரத்தில் செயலற்று இருக்க இயலவில்லை'

2 mins read
3bbfd7ea-4b86-421a-a9d0-a0438e7453ba
திகில் அடைந்தபோதும் தாக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு, கையில் கிடைத்த பொருள்களை ஆடவர்மேல் வீசும் உணவக ஊழியர்கள். படம்: இணையக் காணொளியில் இருந்து எடுக்கப்பட்டது -

பீச் ரோட்­டில் உள்ள சோங் ஹுவா ஸ்டீம்­போட் உண­வ­கத்­துக்கு அருகே ஆட­வர் ஒரு­வர் தனது மனை­வியை வெட்­டிக் கொலை­செய்ய முயன்­ற­போது உண­வக ஊழி­யர்­கள் உட­ன­டி­யா­கச் செய­லில் இறங்கி அவ­ரைத் தடுக்க முயன்­ற­னர்.

உதவி கேட்டு அல­றிய பெண்­ணின் குர­லைக் கேட்டு வெளியே வந்­த­போது இரத்த வெள்­ளத்­தில் கிடந்த பெண்ணை ஆட­வர் தொடர்ந்து வெட்­டுக்­கத்­தி­யால் தாக்­கிய காட்சி திகி­லூட்­டி­ய­தாக அவர்­கள் கூறி­னர்.

பிளாஸ்­டிக் நாற்­கா­லி­கள், உலோக அறி­விப்­புப் பல­கை­கள் எனக் கையில் கிடைத்­த­வற்­றைத் தூக்கி ஆட­வர்­மேல் வீசி­ய­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

குப்­பைத் தொட்­டி­களை எடுத்து வீசி­ய­தா­கக் கூறி­னார் 30 வயது திரு ஜேக்கி டீ. தொடர்ந்து தாக்­கிய ஆட­வ­ரைப் பார்த்து பயந்­தா­லும் தான் ஏதா­வது செய்­யா­விட்­டால் அந்­தப் பெண் உயி­ரி­ழக்க நேரி­டும் என்று புரிந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"எங்­கள் கண் முன்னே அந்­தப் பெண்­ணின் உயி­ருக்கு ஆபத்து எனும்­போது வெறு­மனே பார்த்­துக்­கொண்டு நிற்க என்­னால் இய­ல­வில்லை," என்­றார் திரு டீ.

திரு டீயை­யும் அந்த ஆட­வர் தாக்க வந்­த­தா­க­வும் நல்­ல­வே­ளை­யாக சோங் ஹுவா ஸ்டீம்­போட் உண­வ­கத்­தின் ஊழி­யர் ஒரு­வர், நாற்­கா­லி­க­ளை­யும் உலோ­கப் பல­கை­க­ளை­யும்­கொண்டு ஆட­வ­ரைத் தடுத்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

திரு டீ பணி­பு­ரி­யும் சமு­ராய் பிபி­கியூ உண­வக முத­லாளி திரு லியோ­னார்ட் ஷி, உலோக அறி­விப்­புப் பல­கை­யைக் கொண்டு தாக்­கு­தல்­கா­ர­ரைத் தடுத்­தார்.

"நாற்­ப­துக்­கும் அதி­கா­மா­னோர் திரண்­ட­போ­தும் ஆட­வ­ரி­டம் வெட்­டுக்­கத்தி இருந்­த­தால் அவர்­கள் அஞ்­சி­னர்; சுமார் பத்து பேர் மட்­டுமே துணிந்து அவ­ரைத் தடுக்க முயன்­ற­னர்," என்று திரு ஷி கூறி­னார்.

சம்­ப­வம் தொடர்­பில் இணை­யத்­தில் பதி­வி­டப்­பட்ட காணொ­ளி­யில் தாக்­கு­தல்­கா­ரர் தன்­னைத் தடுத்து நிறுத்த முயன்­றோரை நோக்­கிக் வெட்­டுக்­கத்­தியை வீசி மிரட்­டு­வது பதி­வா­கி­யுள்­ளது.

பிளாஸ்­டிக் நாற்­கா­லி­களை தாக்­கு­தல்­கா­ரர்­மேல் வீசிய திரு வேய் சென் சியாங், தான் கண்ட காட்­சியை எந்­நா­ளும் மறக்­கவே முடி­யாது என்­றார்.

உண­வக ஊழி­யர்­கள் அந்த ஆட­வரை, குறு­க­லான சந்து ஒன்­றில் துரத்­திச் சென்­ற­னர். பின்­னர் காவல்­துறை அதி­கா­ரி­கள் 'டேசர்' எனப்­படும் உடலை செய­லி­ழக்­கச் செய்­யும் கரு­வி­யைக் கொண்டு ஆட­வரை முடக்­கி­னர்.

நேற்று முன்­தி­னம் மாலை ஐந்­தரை மணி­ய­ள­வில் நடந்த சம்­ப­வத்­தில் 46 வயது ஆட­வர் தனது மணிக்­கட்­டை­யும் காயப்­ப­டுத்­திக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது. 41 வய­தா­கும் அவ­ரது மனை­விக்­குப் பல இடங்­களில் காயம் ஏற்­பட்­டது.

இரு­வ­ரும் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர். ஆட­வ­ருக்கு ஆயு­த­மேந்­திய அதி­கா­ரி­கள் காவல் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆட­வர் தற்­போது மனை­வி­யைப் பிரிந்து வாழ்­வ­தா­க­வும் சீனா­வைச் சேர்ந்த இந்­தத் தம்­ப­திக்கு ஒரு மக­னும், மகளும் இருப்­ப­தா­க­வும் அவர்­களை அறிந்­த­வர்­கள் கூறி­னர். சம்­ப­வத்­தைக் கொலை முயற்சி என்று காவல்­துறை வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது. இன்று ஆட­வர்­மேல் நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும்.

பீச் ரோடு தாக்குதலின்போது துணிச்சலுடன் செயல்பட்ட உணவக ஊழியர்கள்