ஷாங்காயில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்திற்கு சிங்கப்பூரர்கள் பலரிடம் இருந்து உதவிகேட்டு அழைப்புகள் வருவதாகவும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் அல்லது கடுமையான மருத்துவச் சிக்கல் உடையோரைக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை தரப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த துணைத் தூதரகத்தின் பேச்சாளர் கூறினார்.
ஷாங்காயில் வசிக்கும் நூற்றுக்கணக்கான சிங்கப்பூரர்கள் உதவிகேட்டு துணைத் தூதரகத்தை நாடியதாகத் தெரிகிறது.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பில் ஷாங்காய் நகரில் நீடிக்கும் முடக்கநிலை குறித்து அங்குள்ள சிங்கப்பூரர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உணவு, அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது, ஒருவேளை நகரை விட்டு வெளியேற விரும்பினால் விமான நிலையத்துக்குச் செல்ல இயலுமா என்பன போன்ற கவலைகளும் அவர்களிடம் நிலவுகின்றன.

