ஈராண்டுகளில் நிறைவடையும் 'போல்டர்' தடுப்புத் திட்டம்

1 mins read
da3a4ef1-dc62-4a3f-872f-cc955dd28743
உயரும் கடல் நீர் மட்டத்திலிருந்து பாதுகாக்க தெக்கோங் தீவில் தடுப்புகளை எழுப்பும் பணிகள் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. படம்: டெஸ்மண்ட் லீ / ஃபேஸ்புக் -

உய­ரும் கடல்­நீர் மட்­டத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரைப் பாது­காக்க தெக்­கோங் தீவில் 'போல்டர்' தடுப்­பு­களை எழுப்­பும் பணி­கள் பாதிக் கட்­டத்­தைத் தாண்­டி­விட்­ட­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­துள்­ளார். தமது ஃபேஸ்புக் பதி­வில் அவர் நேற்று இதைக் குறிப்­பிட்­டார்.

தடுப்புகளுக்கான பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை எழுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு லீ கூறினார்.

சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­றை­யாக இத்­த­கைய திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. 'போல்­டர்' தடுப்­பு­களுக்­கான நிலம் தெக்­கோங்­கில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­க திரு லீ சொன்­னார். அந்த நிலத்தை வலுப்­ப­டுத்த அப்­பகு­தி­யில் மணலை மேம்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் சென்ற வாரம் நேரில் சென்று பார்­வை­யிட்ட அவர் குறிப்­பிட்­டார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகிய இரண்­டும் 2016ஆம் ஆண்­டில் இத்­திட்­டம் குறித்து அறி­வித்­தன. இதர சில திட்­டங்­க­ளைப்­போல் இதற்­கும் கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் இடை­யூ­று­களை விளை­வித்­த­தா­கக் கூறிய அமைச்­சர் லீ, 2024ஆம் ஆண்டு இறு­திக்­குள் தடுப்­பு­கள் முழு­மை­யாக எழுப்­பப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்­தார்.

"2019ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­ய­தைப்­போல் தெக்­கோங்­கில் மேற்­கொள்­ளப்­படும் இத்­திட்­டம், 'போல்­டர்' தடுப்­பு­களை எழுப்­பு­வ­தில் நமக்கு அனு­ப­வத்தை வழங்­கும். அது, கடற்­க­ரை­க­ளைப் பாது­காக்­க­வும் கடல் நீர்­மட்­டம் உயர்­வ­தற்கு எதி­ராக மீள்­தி­றனை வளர்க்­க­வும் உத­வ­லாம்," என்று திரு லீ கூறி­னார். இதில் அனு­ப­வம் ­வாய்ந்த நெதர்­லாந்­து­டன் சிங்­கப்­பூர் இணைந்து செயல்­ப­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.