'கட்டுப்பாடுகளைத் தளர்த்த இரு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படும்'

'கட்டுப்பாடுகளைத் தளர்த்த இரு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படும்'

1 mins read
e4d568a3-b6b7-4127-b88e-d09a3cf14fc5
உணவுப் பொட்டலங்களை வழங்கும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மேலும் தளர்த்­து­வ­தன் தொடர்­பில் இரண்டு அம்­சங்­கள் கருத்­தில்­கொள்­ளப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்ளார்.

முத­லா­வ­தாக, மருத்­து­வ­ம­னை­களில் எத்­தனை நோயா­ளி­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ள­மு­டி­யும், கிருமித்­தொற்­றுக்கு ஆளான எத்­தனை பேர் மோச­மாக நோய்­வாய்ப்­படு­கின்­ற­னர் ஆகி­யவை கண்­காணிக்­கப்­படும். அடுத்­த­ப­டி­யாக புதி­தாக உரு­வெ­டுக்­கக்­கூ­டிய கொவிட்-19 கிருமி வகை போன்ற அடுத்த கிரு­மிப் பர­வல் அலையை ஏற்­ப­டுத்­தும் சாத்­தி­யத்தை அதி­கரிக்­கும் அம்­சங்­கள் ஆரா­யப்­படும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

"கூடு­தல் நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் அதே வேளை­யில் இந்த இரு அம்­சங்­களில் போது­மான கவ­னம் செலுத்­த­வேண்­டும்," என்று கொவிட்-19 சூழ­லைக் கையா­ளும் அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு ஓங் சொன்­னார். சிங்கப்பூர் பெரிய அள­வில் கட்­டுப்­பா­டு­க­ளைப் தளர்த்­தி­யபோதும் புதிய கிரு­மித்­தொற்றுச் சம்­ப­வங்­கள் குறைந்து வந்­துள்­ளதை அவர் சுட்டி­னார்.

அதி­க­பட்­ச­மாக எத்­தனை பேர் ஒன்­று­கூ­ட­லாம், முகக்­க­வ­சம் அணி­வது, வேலை­யி­டங்­க­ளுக்­கான விதி­மு­றை­கள், பாது­காப்பு இடை­வெளி, நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும் இடங்­களில் எத்­தனை விழுக்­காட்­டுப் பகு­தி­களை நிரப்­ப­லாம் ஆகி­ய­வற்றை மைய­மா­கக் கொண்டு கட்டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­படும் என்று திரு ஓங் கூறி­னார். எதி­லும் அக­ல கால் வைக்­கா­மல் பாது­காப்­பான முறை­யில் நட­வ­டிக்­கை­களை எடுப்­பதே சிங்­கப்­பூ­ருக்கு உத­வி­யிருக்கும் அணுகுமுறை என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

தாம் நாடா­ளு­மன்ற உறுப்­பினராக இருக்­கும் செம்­ப­வாங்ல் நோன்­புப் பெரு­நா­ளை­யொட்டி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­களை வழங்­கும் நிகழ்­வில் அமைச்­சர் ஓங் பேசி­னார்.