முதன்முறையாக சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோகூர் முதலமைச்சர்

முதன்முறையாக சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோகூர் முதலமைச்சர்

1 mins read
efc3fe53-402a-4983-ba9f-a31474e22245
-

மலே­சி­யா­வின் ஜோகூர் மாநில முத­ல­மைச்­சர் ஒன் ஹஃபிஸ் காஸி சிங்­கப்­பூ­ருக்கு மூன்று நாள்­ அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்டுள்ளார். முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொள்­ளும் அவர், பிர­த­மர் லீ சியன் லூங்­கை­யும் ஆறு சிங்­கப்­பூர் அமைச்­சர்­க­ளை­யும் சந்­திப்­பார்.

வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னின் அழைப்­பை ஏற்று 43 வயது திரு ஹஃபிஸ் இங்கு வருகை தந்துள்ளார்.

ஜோகூர் மாநில முத­ல­மைச்­ச­ரு­டன் அம்­மா­நில அர­சாங்­கத்­தின் அதி­கா­ரி­களும் சிங்­கப்­பூர் வந்­துள்­ளனர்.

பிர­த­மர் லீ சியன் லூங், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்­ணன், வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், போக்கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் கல்வி, வெளி­யு­றவு ஆகியவற்றின் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான மாலிக்கி ஒஸ்­மான், வர்த்­தக, தொழில் துணை அமைச்­ச­ரும் கலா­சார, சமூக, இளையர் துறை துணை அமைச்­ச­ரு­மான எல்­வின் டான் ஆகி­யோ­ரை திரு ஹஃபிஸ் சந்­திப்­பார் என்று வெளி­யு­றவு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்று முதல் வரும் வியா­ழக்­கி­ழமை வரை மரீனா பே சேண்ட்­சில் நடை­பெ­றும் 'வாட்­டர் லீடர்ஸ் சமிட்' எனும் தண்­ணீர் தொடர்பிலான மாநாட்­டிலும் சென்ற மாதம் 15ஆம் தேதியன்று பதவியேற்ற திரு ஹஃபிஸ் கலந்து­கொள்­வார்.