விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
6c6b56bb-e8cc-49e8-8a58-29817e70d95f
-

சாங்கி விமான நிலை­யத்­தில் சென்ற வாரம் பய­ணி­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முன்­பி­ருந்­த­தில் 31 விழுக்­காட்­டுப் பய­ணி­கள் சென்ற வாரம் வந்­து­சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

ஒப்­பு­நோக்க ஒரு மாதத்­திற்கு முன்பு அது 18 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சிங்­கப்­பூர் இம்­மா­தம் 1ஆம் தேதி கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி செலுத்­திக்­கொண்ட பய­ணி­க­ளுக்கு எல்­லை­களை முழு­தும் திறந்த பிறகு விமா­னப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­ வ­ரு­கின்­றது.

இந்த ஆண்டு இறு­திக்­குள் கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லுக்கு முன்பு பதி­வான விமா­னப் பய­ணங்­களின் எண்­ணிக்­கை­யில் பாதியை எட்­டு­வது சிங்­கப்­பூ­ரின் இலக்கு.

அண்­மை­யில் அதி­க­ரிக்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்து சிங்­கப்­பூ­ரின் இலக்கை எட்ட முடி­யும் என்ற நம்­பிக்­கை­யைத் தரு­வ­தாக சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யு­டன் முடி­வ­டைந்த வாரத்­தில் 400,000 விமா­னப் பய­ணி­கள் சிங்­கப்­பூர் வழியே சென்­ற­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஆஸ்­தி­ரே­லியா, மலே­சியா, இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து உள்­ளிட்ட நாடு­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யில் அதி­க­மா­னோர் பய­ணம் செய்­த­தாக ஆணை­யம் கூறி­யது.

சென்ற வாரம் சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­சென்ற விமா­னச் சேவை­களின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வ­லுக்கு முன்­பி­ருந்த அள­வில் அது 38 விழுக்­காடு என்று ஆணை­யம் தெரி­வித்­தது. சென்ற மாதம் அது 29 விழுக்­கா­டாக இருந்­தது.

இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே அதி­க­மான விமா­னச் சேவை­கள் இயங்­கு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

அடுத்த மாதம் மே தினம், நோன்­புப் பெரு­நாள் ஆகி­ய­வற்றை ஒட்டி நீண்ட வார இறுதி விடு­முறை வரு­கிறது. அதன் பின்­னர் பள்ளி விடு­மு­றை­யும் தொடங்­கு­கிறது.

இத்­த­கைய விடு­மு­றைக் காலங்­களில் விமா­னப் பய­ணம் மேற்­கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கணி­ச­மாக உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஆணை­யத்­தின் தலைமை இயக்­கு­நர் ஹான் கோக் ஜுவான் கூறி­னார்.

பயண நாளன்று முன்­கூட்­டியே விமான நிலை­யத்­துக்கு வந்­து­விடும்படி பய­ணி­களை அவர் கேட்டுக்­கொண்­டார். இவ்­வாறு செய்­வ­தால், பய­ணம் தொடர்­பான விமான நிலைய நடை­மு­றை­க­ளுக்­குப் போதிய நேரம் கிடைக்­கும் என்­பதை அவர் நினை­வூட்­டி­னார்.

சென்ற ஆண்டு முழு­வ­தும் சாங்கி விமான நிலை­யத்­தின் வழி­யா­கப் பய­ணம் மேற்­கொண்­ட­வர்­களின் எண்­ணிக்கை மூன்று மில்­லி­யன். இந்த ஆண்­டின் முதல் இரண்டு மாதங்­களில் மட்­டும் 1.42 மில்­லி­யன் பய­ணி­கள் சாங்­கிக்கு வந்­து­சென்­ற­தாக சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.

சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈர்க்­கும் நோக்­கில் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் அண்­மை­யில் அறி­வித்­துள்ள திட்­டங்­களும் விமா­னப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்க கைகொ­டுக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.