கூசு தீவு மலையில் தீ எரிவதை முதலில் பார்த்து காவல்துறையை அழைத்தார் ஹரிஹரன்

கூசு தீவு மலையில் தீ எரிவதை முதலில் பார்த்து காவல்துறையை அழைத்தார் ஹரிஹரன்

2 mins read
4e5f94eb-36f6-4b84-a0fa-bfe0a3427d98
ஞாயிறு மாலை கூசு தீவு மலையில் மளமளவென பற்றி எரிந்த தீயில் சேமடைந்த வழிபாட்டுக்கூடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கூசு தீவின் மலைமீது நேற்று முன்தினம் மாலை பற்­றி எரிந்த தீயில் அங்கு இருந்த கிரா­மாட் நினை­வி­டம் என்­ற­ழைக்­கப்­படும் மூன்று மலாய் வழி­பாட்­டுக்­கூ­டங்­கள் கடு மையாகச் சேத­ம­டைந்­தன.

தீச்­சம்­ப­வத்தை அங்கு பணி­யில் இருந்த துப்­பு­ர­வா­ளர் ஒரு­வர் முதன்­மு­த­லா­கக் கண்­ட­தாக நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

மாலை 6.20 மணி­ய­ள­வில் பற்றி எரிந்­ததை அவர் கண்­டா­கக் கூறப்­

ப­டு­கிறது. தீப்­பற்­றி­ய­தற்­கான கார­ணம் இன்­னும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

சேத­ம­டைந்த வழி­பாட்­டுக்­கூ­டங்­கள் மீண்­டும் கட்டி எழுப்­பப்­படும் என்று அதன் பரா­ம­ரிப்­பா­ள­ரான திரு இஷாக் சம்­சு­தின், 60, தெரி­வித்­தார்.

தீச்­சம்­ப­வம் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்­த­தா­க­வும் வழி­பாட்­டுக் கூடங்­கள் அழிந்­ததை நம்­பக் கடி­ன­மாக இருந்­தது என்­றும் அவர் கூறி­னார். வழி­பாட்­டின் போது பயன்­ப­டுத்­தப்­படும் ஊது­வத்­தி க­ளால் தீப்­பி­டித்­தி­ருக்க வாய்ப்பு இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

கூசு தீவில் மூன்­றாண்­டு­க­ளாக துப்­பு­ரவு வேலை செய்து வரும் ஹரி­ஹ­ரன், 26, என்­ப­வர் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ள­ரி­டம் பேசி­னார்.

மாலை நேரத்­தில் கரு­கிய வாடையை தாம் உணர்ந்­த­தா­க­வும் அத­னைத் தொடர்ந்து வழி­பாட்­டுக்­கூ­டங்­களை நோக்கி ஓடி­ய­போது அவை தீப்­பற்றி எரிந்­து­கொண்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். பின்­னர் இது­பற்றி காவல்­து­றை­யி­ட­மும் திரு இஷாக்­கி­ட­மும் தெரி­வித்­த­தா­க­வும் ஹரி­ஹ­ரன் சொன்­னார்.

இரவு நேரம் நெருங்­கிய அந்த வேளை­யில் விரைந்து வந்த சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் தீய­ணைப்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

கடு­மை­யாக பெய்த மழை அவர்­க­ளின் முயற்­சிக்கு ஒத்­து­ழைத்­தது. தீய­ணைப்பு முயற்­சிக்கு கடல்­நீ­ரைப் பயன்­ப­டுத்த சுமார் 20 தண்­ணீர்க் குழாய்­களை அவர்­கள் பயன்­ப­டுத்­தி­னர்.

அந்­தக் குழாய் ஒவ்­வொன்­றும் 30 மீட்­டர் நீள­முள்­ள­தாக இருந்­த­தென ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

அதன் செய்­தி­யா­ளர் நேற்­றுக் காலை அங்கு சென்று பார்த்­த­போது சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் இரு பட­கு­கள் தீவின் பட­குத்­து­றை­களில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­டார்.

பிற்­ப­கல் 12.30 மணி­ய­ள­வில் விசா­ரணை அதி­கா­ரி­கள் 152 படி

­க­ளைக் கொண்ட மலை­மீது ஏறி வழி­பாட்­டுக் கூடங்­க­ளுக்­குச் சென்­ற­னர். தீப்­பி­டித்த பகுதி சுற்றி மறைக்­கப்­பட்டு இருந்­தது.

தீப்பிடித்த வேளையில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் கூறப் படுகிறது.