கடல்நீர்மட்ட உயர்வை கண்காணிக்க 'டுரோன்'

கடல்நீர்மட்ட உயர்வை கண்காணிக்க 'டுரோன்'

2 mins read
1caf1b76-545b-47a3-aea2-c71b74362068
-

கடல்­நீர்­மட்ட உயர்­வைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் ஒரு கட்­டத்­தில் ஆளில்லா வானூர்­தி­யை­யும் (டுரோன்) கண்­கா­ணிப்­புக் கரு­வி­

க­ளை­யும் பயன்­ப­டுத்த வேண்டி வர­லாம் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­துள்­ளார்.

கடல்­நீர்­மட்ட பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் எடுத்து வரும் முயற்­சி­களில் இவை­யும் அடங்­கும் என்­றார் அவர். இது­தொ­டர்­பாக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் யோச­னை­க­ளுக்கு அழைப்பு விடுக்­கும் என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் அனைத்­து­லக தண்­ணீர் வாரம் மற்­றும் 'கிளீன்­என்­வைரோ' என்­னும் இரு­வித சுற்­றுச்­சூ­ழல் மாநா­டு­க­ளை தொடங்கி வைத்து அவர் உரை நிகழ்த்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரின் கட­லோ­ரத்­தி­லும் உட்­பு­றத்­தி­லும் நிக­ழக்­கூ­டிய வெள்­ளம் தொடர்­பான தர­வு­கள் மீது பகுப்­பாய்வு நடத்தி விவ­ரங்­க­ளைச் சேக­ரிப்­பது, விண்­வெ­ளிப் படங்­கள் மற்­றும் ரேடார் கண்­கா­ணிப்பு போன்ற வளர்ந்­து­வ­ரும் உணர்­

க­ரு­வித் தொழில்­நுட்­பத்­தின் பயன்­பாடு ஆகி­யன தொடர்­பாக கழ­கம் யோச­னை­களை வர­வேற்­கும் என்று அப்­போது அவர் கூறி­னார்.

"இந்த யோச­னை­கள் வலு­வான கட­லோ­ரப் பாது­காப்பு உத்­தி­களை வகுப்­ப­தில் கழ­கத்­திற்கு உத­வும்," என்­றும் திரு­வாட்டி ஃபூ குறிப்­பிட்­டார்.

அமைச்­சர் தெரி­வித்த கருத்­துக்கு இணங்க பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் நேற்று ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. மூன்று அம்­சங்­களில் யோச­னை­களை வர­வேற்­ப­தாக அதில் அது தெரி­வித்­தது.

முத­லா­வது, குறைந்த பரா­ம­ரிப்பு ரேடார் தொழில்­நுட்­பம் மற்­றும் விண்­வெ­ளியை அடிப்­படை யாகக் கொண்ட, இணை­யத்­தின் துணை­யு­டன் உட­னுக்­கு­டன் தர­வு­ களை வழங்­கக்கூடிய உணர்­க­ரு­வி­கள் ஆகி­யன தொடர்­பா­னது. சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளில் கடல்நீரின் உயர்வு வேறுபடுவதைக் காட்ட இவற்றின் தரவுகள் உதவும். நீண்டகால அடிப்படையில் நிகழும் மாற்றங் களைக் கண்காணிக்கவும் கழகத் திற்கு இவை பயன்படும் என்று கழகத்தின் கடலோரப் பாதுகாப்புத் துறை துணை இயக்கு நர் ஹோ சாய் டெக், ஸ்ட்ெரய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறி னார்.

கடற்கரை அருகே கடல்நீர் மட்டம் உயர்வதால் கப்பல்கள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைக் கண்காணிப்பது இரண்டாவது அம்சம். கடலோரத்தை கப்பல் நெருங்கும்போது ஆழமற்ற நீரில் எழும் அலைகள் கடல்நீர்மட்ட உயர்வின் தாக்கத்தை மோசமாக் கக்கூடும்.

கடலோரத்திலும் நாட்டின் உட் புறத்திலும் ஏற்படும் வெள்ளத்தின் ஆழத்தையும் அளவையும் கண் காணிக்க ஆளில்லா வானூர்தி, கண்காணிப்புக் கருவி, குடிமக்கள் வழங்கும் விவேகக் கைபேசி படங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதற்கான சாத்தியம் தொடர் பானது மூன்றாவது அம்சம் என்று கழகம் கூறியது.