புதுப்பொலிவு பெற்ற மறுவாழ்வு நிலையத்தில் நவீன வசதிகள்

புதுப்பொலிவு பெற்ற மறுவாழ்வு நிலையத்தில் நவீன வசதிகள்

2 mins read
6ffdeee9-dac7-46dc-911e-1eb4fe4a22f5
முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட ரினேஷ் ராதாகிருஷ்ணன், 17, மறுவாழ்வு நிலையத்தின் நவீன கருவிகளின் துணையோடு நடப்பதை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டான் டோக் செங் மருத்­து­வ­மனை யில் புதுப்பிக்கப்பட்டுள்ள மறு­வாழ்வு நிலை­யம், அதி­க­ரித்து வரும் மருத்­துவ தேவை­க­ளைச் சமா­ளிக்க கைகொ­டுக்­கும்.

குறிப்­பாக, சிங்­கப்பூரின் மூப்

­ப­டை­யும் மக்­கள்­தொகை மற்­றும் உடற்­கு­றைப் பிரச்­சினைகளைக் கையாள இது உத­வும்.

ஏறக்­குறை 20,000 சதுர அடி பரப்­ப­ள­வில் புதுப்­பிக்­கப்­பட்­டுள்ள நவீன மறு­வாழ்வு சிகிச்சை மருந்­த­கம் இதற்கு முன்­னர் இருந்த அள­வைக் காட்­டி­லும் நான்கு மடங்கு பெரி­யது.

வழக்­க­மான சிகிச்­சைக் கரு­வி­ க­ளு­டன் இயந்­திர மனி­த­னும் இதில் பயன்­ப­டுத்­தப்படும். குண­ம­டை­யும் நோயாளிகளுக்கு இது பெரி­தும் உத­வும்.

பெரிய அள­வில் உரு­வாகி உள்ள இந்­தப் புதிய நிலை­யத்­திற்கு ஆண்­டுக்கு 13,000 நோயா­ளி­கள் வரை வர­லாம் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.

2020ஆம் ஆண்டு, புதுப்பித்­த­லுக்கு முன்­னர் 5,400 நோயாளி களும் 2019ஆம் ஆண்டு 8,000 நோயா­ளி­களும் இங்கு வந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் மூப்­ப­டை­யும் மக்­கள் தொகை­யைச் சமா­ளிக்க இது­போன்ற மறு­வாழ்வு நிலை­யங் களுக்­கான தேவை அதி­க­ரித்துள்­ள­தாக டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் மறு­வாழ்வு மருந்­துத் துறை தலை­வர் டாக்­டர் லோ யோங் ஜூ கூறி­னார்.

"மூப்­ப­டை­யும் மக்களுடன் உடற்­குறை உள்­ளோ­ரும் அதி­க­ரிப்­ப­தால் அவர்கள் எல்­லா­ருக்­கு­மான மறு­வாழ்வு வசதி தரு­வ­தில் சிர­மம் இருந்­தது. அத­னால் வீட்­டி­லேயே தங்­க­வேண்­டிய பல­ருக்­கும் பிரச்­சி­னை­கள் அதி­க­ரிக்­கின்­றன.

"இப்­போது பெரிய அள­வில் வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்பட்­டி­ருப்­ப­தால் இனி அவர்­க­ளுக்­கும் சேவை அளிக்க முடி­யும்," என்று அவர் தெரி­வித்­தார்.

பக்­க­வா­தம், மூளை பாதிப்பு மற்­றும் முது­குத்தண்டு காயங்­கள் போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­களை நிலை­யம் கையாள்­கிறது.

புதிய நிலைய தொடக்க நிகழ்­வில் பேசிய சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், அர­சாங்­கத்­தின் அதி­ந­வீ­னத் தொழில்­நுட்­பத்­திற்கு இணை­யாக கடப்­பாடு கொண்ட மனி­த­வ­ளம் மற்­றும் சமூக ஆத­ரவு போன்­ற­வற்­றின் அவ­சி­யம் குறித்து வலி­யு­றுத்­தி­னார்.