பிரதமர் லீ: கொவிட்-19 சூழலில் சிங்கப்பூர்-நியூசிலாந்து உறவு மேம்பட்டது

பிரதமர் லீ: கொவிட்-19 சூழலில் சிங்கப்பூர்-நியூசிலாந்து உறவு மேம்பட்டது

2 mins read
c46c2bcd-b207-4cc7-8689-c1e341beb604
இஸ்தானாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் லீ (வலது),திருவாட்டி ஜெசிண்டா ஆர்டன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல், சிங்­கப்­பூ­ரை­யும் நியூ­சி­லாந்­தை­யும் மேலும் நெருக்­க­மாக்­கி­ய­தாக பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்ளார். தங்­க­ளின் அனு­ப­வங்­களைப் பகிர்­ந்து­கொள்ள நியூ­சிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்­ட­னும் தாமும் அடிக்­கடி தொடர்புகொண்­ட­தா திரு லீ தெரி­வித்­தார்.

மேலும், கிருமி தொடர்­பான தக­வல்­களை இரு­நாட்டு அமைச்­சர்­களும் அதி­கா­ரி­களும் அடிக்­கடி பகிர்­ந்து­கொள்­வதா­க­வும் அவர் சொன்­னார்.

திரு­வாட்டி ஆர்­டன் சிங்­கப்­பூருக்கு மூன்று நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். அவ­ருக்கு விருந்து வழங்­கி­ய­போது திரு லீ பேசி­னார்.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­போது பல விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன. அப்­போது தங்களின் குடி­மக்­க­ளை­ அழைத்­து­வர இரு நாடு­களும் ஒன்றுக்கு ஒன்று உத­வி­ய­தை திரு லீ குறிப்­பிட்­டார்.

எல்­லை­கள் மூடப்­பட்ட பிறகு விநி­யோ­கச் சங்­கி­லி­களில் இடை­யூ­று­கள் ஏற்­பட்­டன. அப்­போது சிங்­கப்­பூ­ருக்­கும் நியூ­சி­லாந்­துக்­கும் இடையே உணவு, மருத்­து­வப் பொருள்­களை அனுப்ப இரு நாடு­களும் சரக்கு விமா­னச் சேவை ஒப்­பந்­தத்­தைச் செய்­து­கொண்­ட­தை­யும் அவர் சுட்­டி­னார்.

"இன்­னும் சொல்­லப்­போ­னால் ஒப்­பந்­தத்­தின்­கீழ் 2020ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நியூ­சி­லாந்­துக்­குச் சென்ற முதல் விமா­னத்­தில் ஒன்­பது நியூ­சி­லாந்து குடி­மக்­கள் நாடு திரும்­பி­னர், அவர்­களில் ஒரு குழந்­தை­யும் அடங்­கும்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

2020ஆம் ஆண்டு மே மாதம் மியன்­மா­ரி­லி­ருந்து தங்­கள் குடி­மக்­களை அழைத்­து­வ­ர­வும் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணைந்து ஒரு விமா­னச் சேவையை இயக்­கின.

பல ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூருக்­கும் நியூ­சி­லாந்­துக்­கும் இடையே இருந்­து­வ­ரும் நட்­பை­யும் நம்­பிக்­கை­யை­யும் அடித்­த­ள­மா­கக் கொண்டே வலு­வான இரு­த­ரப்பு உறவு அமைந்­துள்­ள­தா­கப் பிர­த­மர் லீ சொன்­னார்.