கிரேஸ் ஃபூ: பருவநிலை தொடர்பிலான தங்களின் முன்னேற்றத்தை நாடுகள் தெரியப்படுத்தவேண்டும்

கிரேஸ் ஃபூ: பருவநிலை தொடர்பிலான தங்களின் முன்னேற்றத்தை நாடுகள் தெரியப்படுத்தவேண்டும்

1 mins read
e0df9180-b042-420a-96a1-491f9268247e
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வார மாநாட்டில் பங்கேற்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அனைத்­து­லக பரு­வ­நிலை இலக்கு­களை அடைய நாடு­கள் தகுந்த திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­த­வேண்­டும், இதன் தொடர்­பில் தங்­க­ளின் முன்­னேற்­றத்­தைத் தெரி­யப்­ப­டுத்­த­வேண்­டும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ கூறி­யுள்­ளார். இதன் தொடர்பிலான இலக்கு­களை அடை­வ­தில் நாடு­கள் பொறுப்­பேற்கவும் ­வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பெரிய இலக்­கு­களை வரை­வதுடன் வேலை முடிந்து­வி­டாது என்­பதே இதற்கு அர்த்­தம் என்­றும் திரு­வாட்டி ஃபூ சுட்­டி­னார்.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக தண்­ணீர் மாநாட்­டின் ஓர் அங்­க­மாக நடை­பெற்ற 'கிளீன்­என்­வைரோ' எனும் கலந்­து­ரை­யா­ட­லில் திரு­வாட்டி ஃபூ பேசி­னார். நீடித்த நிலைத்­தன்­மை­யைப் பொறுத்­த­வரை தான் வரைந்­துள்ள தேசிய திட்டங்­களைச் செயல்­ப­டுத்த சிங்­கப்­பூர் கட­மைப்­பட்­டுள்­ளது என்று அவர் சொன்­னார்.

அதையும் தாண்டி எவ்வாறு தன்னை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் சிங்கப்பூர் ஆராயும் என்றும் அவர் கூறினார்.

'சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030'இன்படி, 2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூர், ஐந்து வெள்ளியாக இருக்கும் ஒரு டன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­திற்­கான கரிம வரியை 50லிருந்து 80 வெள்ளி வரை உயர்த்தும்.