சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல்கட்ட விசாரணையில், கூசு தீவில் சென்ற ஞாயிற்றுக்கிழமை வேண்டுமேன்றே தீ மூட்டப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுவருவதாக குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. தீச்சம்பவத்தில் கூசு தீவின் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று வழிபாட்டுத் தலங்கள் சேதமுற்றன.

