மூத்த குடிமக்களை ஏமாற்றி வங்கியில் ஆயிரக்கணக்கில் பணம் எடுத்ததை மாது ஒப்புக்கொண்டார்

மூத்த குடிமக்களை ஏமாற்றி வங்கியில் ஆயிரக்கணக்கில் பணம் எடுத்ததை மாது ஒப்புக்கொண்டார்

1 mins read
8d0de764-2e56-4903-b7e4-0c888d18fbdd
-

மூத்த குடி­மக்­க­ளி­டன் நட்பு ஏற்­ப­டுத்­திக்­கொண்டு அவர்­க­ளின் வங்­கிக் கணக்­கு­களில் இருந்து சட்­ட­வி­ரோ­த­மா­கப் பணம் எடுத்த பெண்­ணுக்கு நேற்று பத்து மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

48 வயது சூ லே பிங் தன் மீது சுமத்­தப்­பட்ட ஏமாற்­றுக் குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டார்.

2019ஆம் ஆண்டு மத்­தி­யில் அவர் 'என்­டி­யுசி ஹெல்த்' நிறு­வ­னத்­தில் வேலைக்­குச் சேர்ந்­தார். தனது வேலை­யின் ஒரு பகு­தி­யாக மூத்த குடி­மக்­கள் ஐவரை அவர் வாரா­வா­ரம் சந்­தித்­தார்.

மூத்த குடி­மக்­க­ளின் மன­நிலை, வாழ்க்­கைச் சூழல், மருந்து நிர்­வா­கம், அண்­மை­யில் கீழே விழ நேர்ந்­ததா, எடை குறைந்­தி­ருக்­கி­றதா போன்ற விவ­ரங்­களை அவர் சேக­ரிப்­பார். அரை மணி நேரச் சந்­திப்­பிற்கு நிறு­வ­னம் அவ­ருக்கு ஏழு வெள்ளி பணம் தரும்.

இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி அவர் 84 வயது திரு­வாட்டி லிம் சியூ எங்­கி­டம் நட்பு ஏற்­ப­டுத்­திக்­கொண்­டார். மருந்து வாங்­கித் தரும்­படி வேண்­டிய திரு­வாட்டி லிம் சூவி­டம் தனது வங்கி அட்­டை­யைத் தந்­தார். அதில் இருந்து சூ ஆயி­ரம் வெள்­ளியை எடுத்­துக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் 50 வெள்ளி எடுத்­த­தாக முதி­ய­வ­ரி­டம் தெரி­வித்­தார்.

மொத்­தம் 26 சம்­ப­வங்­களில் கிட்­டத்­தட்ட $18,000 சூ ஏமாற்றி எடுத்­துக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

ஏமாற்­றிய குற்­றத்­துக்கு பத்­தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.