செயலிகளில் மூலம் போதைப் பொருளைப் பரிவர்ததனை செய்த 32 பேர் கைது

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு டெலிகிராம் தளம் போன்ற செயலிகளைக் குறிவைத்து நடத்தில சோதனையில் 32 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இந்தச் செயலிகள் வழி போதைப் பொருள்களை விற்றதாகவும், வாங்கியதாகவும் கூறப்பட்டது.

ஏப்ரல் 18, 19 ஆகிய இரண்டு தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் $140,000 மதிப்புள்ள போதைப் பொருள்களும் சிக்கின. 191 கிராம் ஐஸ், 718 கிராம் கஞ்சா, 714 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவற்றோடு மற்ற பல போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இதுபோன்று செயலிகள் மூலம் போதைப் பொருள் விற்பவர்களைக் குறிவைத்து நடத்திய சோதனையில் சென்றாண்டு நவம்பர் மாதம் 50 சந்தேக நபர்கள் பிடிப்பட்டனர்.

செயலிகள் வழி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்கும் என நம்பிக்கையில் அவ்வாறு செய்வதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!