பிரதமர் லீ: சமூக ஊடகங்களில் என் பயணம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டன

பிரதமர் லீ: சமூக ஊடகங்களில் என் பயணம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டன

1 mins read
24036441-609e-42c4-96a4-783d286e2523
சமூக ஊடகங்களில் தமது பத்தாண்டுப் பயணம் குறித்து நேற்று பிரதமர் லீ பதிவிட்டார். படம்: லீ சியன் லூங்/ ஃபேஸ்புக் -

பிர­த­மர் லீ சியன் லூங் பத்­தாண்டு­களுக்கு முன் தமது சமூக ஊட­கப் பக்­கங்­க­ளைத் துவங்­கி­ய­போது, எதை எதிர்­பார்ப்­பது என்று அறி­யாத நிலை­யில் இருந்­த­தாக நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டார்.

"இருப்­பி­னும் இணை­ய­வா­சி­களு­டன், பொது­மக்­க­ளு­டன் நேர­டி­யாக இணை­வ­தற்கு அது ஒரு நல்ல வழி­யா­கத் தெரிந்­தது," என்று பதி­வில் கூறி­யி­ருந்­தார்.

ஃபேஸ்புக் தளத்­தில் திரு லீ 2012ஆம் ஆண்டு ஏப்­ரல் 20ஆம் தேதி­யன்று இணைந்­தார். தற்­போது இத்­த­ளத்­தில் அவரை 1.7 மில்­லியன் பேர் பின்­தொ­டர்­வ­தாக அறி­யப்­படுகிறது.

மகிழ்ச்­சி­ய­ளிக்­கும், ஆச்­ச­ரி­யம் தரும், தக­வல் நிறைந்த, சில நேரங்­களில் திகைப்­பும் ஊட்­டும் அனு­ப­வ­மா­கத் தமது சமூக ஊட­கப் பய­ணம் இது­வரை இருந்­துள்­ள­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

ஒரு­சில பதி­வு­க­ளுக்­குப் பெரும் வர­வேற்பு, வேறு சில பதி­வு­களுக்கு எதிர்­பார்த்த வர­வேற்பு இல்­லா­தது குறித்­துத் தாம் அவ்­வப்­போது நினைத்­துப் பார்த்­த­தை­யும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

"சமூக ஊட­கங்­கள் பெரு­ம­ள­வில் மாறி­விட்­டன. நமது சமூக வழக்­கங்­கள் சில­வற்­றை­யும் பல­வாறு மாற்­றி­விட்­டன," என்ற திரு லீ, தமக்கு ஆத­ரவு அளிக்­கும் இணை­ய­வா­சி­க­ளுக்கு தமது நன்றி­யை­யும் தெரி­வித்­தார்.