'தீவிர சுற்றுப்புற நிலைத்தன்மை முயற்சிகள் பள்ளிகளில் தேவை'

'தீவிர சுற்றுப்புற நிலைத்தன்மை முயற்சிகள் பள்ளிகளில் தேவை'

1 mins read
530bbad2-14f8-4cdc-adb9-021d82dd933b
-

நீடித்த நிலைத்­தன்மை முயற்­சி­களை மேலும் அதி­க­மான பள்­ளி­கள் மேற்­கொண்டு தங்­க­ளின் மாண­வர்­களை, சுற்­றுப்­பு­றத் தூதர்­களாக உரு­மாற்ற வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­யுள்­ளார்.

"நெருக்­கடி அளிக்­கும் ஒன்­றாக பரு­வ­நிலை நட­வ­டிக்­கை­கள் இருந்து வரு­கின்­றன. இந்த விவ­கா­ரத்­தைத் தாம­திப்­ப­தும் ஆகாது," என்று மீ டோ பள்­ளிக்கு நேற்று சென்­றி­ருந்த திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

கல்வி அமைச்சு கடந்த ஆண்டு அறிவித்த 'சுற்­றுப்­பு­றத் தூதர்' திட்­டத்­திற்­காக நான்கு பள்­ளி­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அதில் ஒன்று இந்த மீ டோ பள்­ளி­யாகும்.

இப்­பள்­ளி­யின் நீடித்த நிலைத்­தன்மை முயற்­சி­கள் 2007ஆம் ஆண்­டி­லேயே தொடங்கி­விட்­டன.

சுற்­றுப்­பு­றத்­தைப் பாது­காத்­தல், அதைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்றை இந்­தப் பள்ளி மாண­வர்­கள் கற்று வரு­கின்­ற­னர்.

நாளை 'பூமி தினம்' அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. இதைக் கொண்­டா­டும் வகை­யில் மாண­வ சுற்­றுப்­பு­றத் தூதர்­கள் மற்­றும் பள்­ளிப் பணி­யா­ளர்­கள் சில­ரு­டன் அதி­பர் ஹலிமா நேற்று மரம் ஒன்றை நட்­டார்.

"பள்­ளிச் சூழ­லின் முழு­மை­யான கற்­றல் ஒருங்­கி­ணைப்­பில் சுற்­றுப்­புற நிலைத்­தன்மை தொடர்­பான ஒரு கலா­சா­ரத்தை மேலும் அதி­க­மான பள்­ளி­கள் உரு­வாக்க வேண்­டும்," என்று அதி­பர் ஹலிமா கேட்­டுக்­கொண்­டார்.