சிங்கப்பூர்-நியூசிலாந்து விமானங்களுக்கான திட்டம் ஆராயப்படுகிறது
நீடித்து நிலைக்கக்கூடிய எரி
பொருளில் விமானங்கள் இயங்கும் வகையில் பசுமை விமானப் பாதையை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்து சிங்கப்பூரும் நியூசிலாந்தும் ஆராய உள்ளன.
தொடர்ந்து, இந்தப் புதிய திட்டத்திற்கு ஆகக்கூடிய செலவுகள், தேவைப்படும் தொழில்நுட்பம் ஆகி யவற்றை இரு நாடுகளும் கலந்து ஆலோசிக்கும்.
பசுமை எரிபொருளில் இயங்கக்கூடிய விமானங்களை இரு நாடுகளின் பயணிகளும் பயன்
படுத்திக்கொள்வதை ஊக்குவிப்பது எப்படி என்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்படும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தானது. ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்திடும் சடங்கை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனும் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனும் பார்வையிட்டனர்.
பின்னர், இணைந்து பணியாற்றக்கூடிய நான்கு அம்சங்களைப் பட்டியலிட்டு இரு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
கொள்கை மற்றும் ஒழுங்குமுறை, தொழில்துறை வளர்ச்சி, வருங்கால உள்கட்டமைப்புத் திட்டமிடலும் அதற்கான ஏற்பாடுகளும், ஊழியரணி உருமாற்றம் ஆகியன அந்த நான்கு அம்சங்கள்.
நீடித்து நிலைக்கக்கூடிய விமான எரிபொருள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன.
நேற்றைய நிகழ்வின்போது விமானப் போக்குவரத்து நிலைத்தன்மை மீதான பங்காளித்துவத்தின் அவசியத்தை போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் விளக்கினார்.
2050ஆம் ஆண்டுவாக்கில் உலகளாவிய விமானப் போக்கு
வரத்துத் துறை வெளியேற்றக்
கூடிய கரியமில வாயுவின் அளவு 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு ஆகக்கூடும் என்று அவர் கூறினார். பசுமை எரிபொருள் அந்த வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் என்றாலும் அதற்கு அதிக செலவாகும் என்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

