ஓசிபிசி வங்கி மோசடி யுடன் தொடர்புடைய இளையர், குண்டர் கும்பல் உறுப்பினர் என்பதோடு இருமுறை கலவரம் செய்த தன் மூலம் நால்வர் காயமடையக் காரணமான வர் என்ற விவரத்தை நீதிமன்றம் நேற்று தெரி வித்தது. லியோங் ஜுன் ஸியான் எனப்படும் இவருக்கு இன்று 21 வயது ஆகிறது.
கலவரம் செய்தது உள்ளிட்ட இரு குற்றச் சாட்டுகளையும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்தையும் இவர் ஒப்புக்கொண்டார். இதர 10 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறியது.