அதிக சரக்குகளைக் கையாள துவாஸில் புதிய தொழில்நுட்பம்

அதிக சரக்குகளைக் கையாள துவாஸில் புதிய தொழில்நுட்பம்

2 mins read
fc8a3335-01e4-4339-975e-4d9135211af0
சரக்குகளை விரைவாக சோதித்து அனுமதிக்க துவாஸ் துறைமுகத் தில் நிறுவப்பட்டுள்ள கதிரியக்க அடிப்படையிலான தொழில்நுட்பம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­சே­ரும் சரக்­கு­களை விரை­வாக சோதித்து அனு­மதி வழங்க குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யத்­திற்கு நட­மாட்­டத் தொழில்­நுட்­பம் கைகொ­டுக்­கிறது.

இதன் கார­ண­மாக வாகன ஓட்­டு­நர்­கள் தாங்­கள் எடுத்­துச் செல்­ல­வேண்­டிய சரக்­கின் ஒப்­பு­தல் படத்­திற்­காக நீண்­ட­நே­ரம் காத்­தி­ருக்க வேண்டி வராது.

'ஆன்-த-ஃபிளை கிளி­ய­ரன்ஸ்' என்று அழைக்­கப்­படும் புதிய நட­வ­டிக்கை துவாஸ் துறை­மு­கத்­தில் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

அதன் பிறகு ஓட்­டு­நர்­கள் அங்கு காத்­தி­ருக்­கும் நேரம் மூன்று முதல் ஐந்து நிமி­டங்­கள் என குறைந்­தது. இதற்கு முன்­னர் அவர்­கள் 14 நிமி­டங்­கள் முதல் 20 நிமி­டங்­கள் வரை காத்­தி­ருக்க வேண்டி இருந்­தது.

உலக வர்த்தக நடு­வம் என்­னும் நிலையை வலு­வாக்­கிக்கொண்டு வரும் சிங்­கப்­பூ­ரில், அதி­க­மான சரக்­கு­க­ளைக் கையா­ளும் துறை­மு­க­மாக துவாஸ் துறை­மு­கத்தை ஆணை­யம் தயார்ப்­ப­டுத்தி வரு­கிறது.

2040ஆம் ஆண்டுவாக்­கில் 65 மில்­லி­யன் 20அடி சரக்­குக் கொள்­

க­லன்­க­ளைக் கையா­ளும் வகை­யில் இந்­தத் துறை­மு­கத்தை மாற்­று­வது எப்­படி என்­பதை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் துறை­மு­கக் கண்­கா­ணிப்­பா­ளர் விளக்­கி­னார்.

அவ்­வாறு தயா­ரா­னால் தற்­போ­தைய 50 மில்­லி­யன் கொள்­க­லன்­

க­ளைக் காட்­டி­லும் 30 விழுக்­காடு அதி­க­மாக துவாஸ் துறை­மு­கம் கையா­ளும்.

தஞ்­சோங் பகார், கெப்­பல், பிரானி மற்­றும் பாசிர் பாஞ்­சாங் முனை­யங்­களை இந்­தத் துறை

­மு­கம் ஒருங்­கி­ணைப்­ப­தன் மூலம், கையா­ளப்­படும் ஏற்றுமதி, இறக்கு மதி சரக்­கு­க­ளின் அளவு அதி­

க­ரிக்­கும்.

சரக்­கு­க­ளைப் பாது­காப்­ப­தற்­கான தேவை எழு­வ­தால் புதிய சரக்கு அனு­மதி முறை­யி­லான நட­வ­டிக்கை அடுத்த ஆண்­டில் அறி­மு­க­மா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. மேலும், தாள் ஆவ­ணங்­க­ளற்ற சரக்கு அனு­ம­தி முறை ­யும் படிப்­ப­டி­யாக அறி­மு­கம் செய்­யப்­பட உள்­ளது.

சரக்­குகளை எடுத்­துச் செல்ல வரும் வாகன ஓட்­டு­நர்­கள் தங்­க­ளது வாகன பதி­வெண் பல­கைப் படத்­தை­யும் சரக்கு அனு­மதி எண்­ணை­யும் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் மின்­னி­லக்க எஸ்ஜி வருகை அட்டை வாயி­லா­கச் சமர்ப்­பித்­தால் போது­மா­ன­தாக இருக்­கும்.

ஆவ­ணங்­களை நேரில் காட்டி அனு­மதி வாங்­கும் முறை அதன் பின்­னர் படிப்­ப­டி­யாக விடை­பெ­றும்.