தமது 13 வயது மகளின் நிர்வாண கோலத்தை காணொளியாகப் பதிவு செய்ய அச்சிறுமியின் படுக்கை அறையில் ரகசிய கேமராவை வைத்த ஆடவருக்கு 18 வார சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த 43 வயது ஆடவர், 2020 ஜூலை 6ஆம் தேதி ஜூரோங்கில் உள்ள தமது வீட்டின் மகளுக்குரிய அறையில் ரகசிய கேமராவை வைத்து அச்சிறுமி உடைமாற்று வதையும் அவரது நிர்வாணத் தையும் கைபேசி வாயிலாகப் பார்த்தார்.
2020 ஆகஸ்ட் 2ஆம் தேதி தமது கணவரின் செயலை அறிந்த 36 வயது மனைவி, இதுகுறித்து காவல்துறையிடம் புகார் செய்தார்.
பாதிக்கப்பட்டவர் வயதில் சிறி யவர் என்பதால் குற்றம் செய்த ஆடவரைப் பற்றிய விவரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

