மருந்தகத்தில் $550,000 மோசடி செய்ததை ஒப்புக்கொண்ட மாது

மருந்தகத்தில் $550,000 மோசடி செய்ததை ஒப்புக்கொண்ட மாது

1 mins read
c609ac8d-33b5-4100-85d1-977c50be9887
-

நொவீ­னா­வில் அமைந்­தி­ருக்­கும் 'வேஸ்­கு­லர் & இன்ட்­டர்­வென்­ஷ­னல் சென்­டர்' மருந்­த­கத்தை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிய 47 வயது ஃபௌஸியா மட் பெர்­லாம் எனும் மாது கிட்­டத்­தட்ட 550,000 வெள்­ளி­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­திய குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

இதன் தொடர்­பில் அவர்­மீது இரண்டு நம்­பிக்கை மோச­டிக் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

தொகை குறிப்­பி­டப்­ப­டா­மல் கையெ­ழுத்­தி­டப்­பட்ட காசோ­லை­களைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தை­யும், பணத்தை ஏமாற்­றி­ய­தை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார். இத­னை­யொட்டி நேற்று அவ­ருக்கு மூன்று ஆண்­டு­கள் நான்கு மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தண்­டனை விதிக்­கும்­போது இத்­த­கைய மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன.

விநி­யோ­கிப்­பா­ள­ருக்­குச் செலுத்த வேண்­டிய தொகையை ஏமாற்­றி­யது, போலி­யான கொள்­மு­தல் ரசீ­து­கள் தயா­ரித்­தது, நிறு­வ­னப் பணத்தை நண்­பர்­க­ளின் வங்­கிக் கணக்­குக்கு மாற்றி பின்­னர் அவர்­க­ளி­டம் இருந்து பணத்­தைப் பெற்­றுக்­கொண்­டது உள்­ளிட்ட குற்­றங்­களில் அவர் ஈடு­பட்­டது கண்­ட­றி­யப்­பட்­டது.

ஃபௌஸியா, 2015ஆம் ஆண்டு பிப்­ர­வரி முதல் 2020 டிசம்­பர் வரை­யான கால­கட்­டத்­தில் நிர்­வாக மேலா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது இவ்­வாறு மோச­டிச் செயல்­களில் ஈடு­பட்­டார்.