தடுப்பூசி போட்டுக்கொள்ளா தோருக்கான மாறுபட்ட பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகள் பெரும்
பாலான இடங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் தேவைப்படாது.
ஆனால், பெரிய நிகழ்வுகள், உணவு, பானக் கடைகள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் அதிக அபாயம் இருப்பதால் அவற்றுக்கு அத்தகைய ஏற்பாடுகள் தொடர்ந்து இருக்கும்.
உலகில் அதிக தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விகிதத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் கிருமிப்
பரவல் குறைந்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்று அல்லாத நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க மருத்துவமனைகளுடன் சுகாதாரப் பணியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். கொவிட்-19 கிருமியால் கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். எனவே அவர்
களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கும் தனித்தனி விதிமுறைகள் அமைக்கப்பட்டதாக நேற்றைய அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தின்போது சுகாதார
அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
மருத்துவமனைகள் அதிக நெருக்கடியைச் சந்தித்துள்ள நேரத்தில் சுகாதாரத்துறையில் அதிக வேலைப் பளு இல்லாமல் இருப்பதை இந்தப் பாதுகாப்பு நடைமுறை உறுதி செய்கிறது. ஒன்றுகூடி ஆடும் வசதிகளைக் கொண்டுள்ள கேளிக்கை இடங்கள் போன்ற அதிக அபாயம் உள்ள இடங்களில் இந்த மாறுபட்ட விதிமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும். குறைந்தது 500 பங்கேற்பாளர்கள் உள்ள பெரிய நிகழ்ச்சிகள், திரு
மணங்கள், மாநாடுகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால் அங்கு, இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு தனித்தனி விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என்று திரு ஓங் கூறினார். உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், உண
வகங்கள் போன்ற உணவு, பான நிறுவனங்களில் அவை தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார். ஆயினும், இக்கடைகளே தனது வாடிக்கையாளர்களைச் சோதிக்க வேண்டியதில்லை. அந்த இடங்களில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர்் மட்டும்தான் உள்ளனர் என்பதை உறுதி செய்ய திடீர் சோதனைகள் நடத்தப்படும்.
வேலையிடத்திலும் தடுப்பூசி தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கொவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளோருக்கு சுகாதார அபாய அறிவிப்புகளை வழங்குவதை சுகாதார அமைச்சு நிறுத்தும். கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், வீட்டில் உள்ளவர்
களின் தொடர்பு எண்களை இணையம் மூலம் அனுப்புவதற்கான தேவையும் இருக்காது. ஆயினும் இவர்கள் தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் செயலாற்றி, தாங்களாகவே நெருங்கியோரிடம் பாதுகாப்புடன் இருக்கும்படி கூறவேண்டும் என்றது அமைச்சு.
'டிரேஸ்டுகெதர்' குறியீட்டை வருடி நுழையும் முறை பெரும்பாலான இடங்களில் இருக்காது ஆயினும், புதிய கிருமி உருமாற்றங்கள் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க 'டிரேஸ்டுகெதர்' செயலியைத் தொடர்ந்து வைத்திருக்கும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது.