கொவிட்-19 தொடர்பிலான கட்டுப்பாடுகளைத் தளர்த்த சிங்கப்பூர் உறுதியாகச் செயல்பட்டு வந்தாலும் அபாயங்கள் குறித்த விழிப்புநிலை தேவைப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். இதனால் கிருமிப்பரவல் முற்றிலும் இல்லாமல் ஆகும்வரையில் சிங்கப்பூர் 'விடுதலை'யை அறிவிக்காது என்று திரு ஓங் கூறினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் அகற்றப்படவில்லை என்பதே உண்மை. இதனைத் திரு ஓங், நேற்று அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சில நாடுகளில் ஓமிக்ரான் அலை மீண்டும் எழும் அபாயம் உள்ளது. மூல ஓமிக்ரான் வகையான பிஏ.1உடன் தொடர்புடைய ஓமிக்ரான் பிஏ2 வகையால்
அமெரிக்காவிலுள்ள சில பகுதிகளில் புதிய அலை திரும்புகிறது.
ஆயினும், ஏற்கெனவே பிஏ.2 வகை இங்கு ஓமிக்ரான அலையை ஏற்படுத்தி இருந்ததால் இது சிங்கப்பூருக்கு அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லை என்றார் திரு ஓங்.
ஆயினும், புதிதாக உருமாறிஉள்ள கிருமியின் தோற்றம்
கவலைக்குரியதாக இருக்கும்.
"இது தொடர்ந்து நமக்குச் சவாலாக இருக்கும். இதனால் நாம் மீண்டும் ஆரம்பநிலைக்குத்
தள்ளப்படலாம்.
"எனவே நாம் பாதுகாப்பாக இருந்து, மெத்தனத்துடன் இருந்திராதபடி பார்த்துக்கொண்டு வருங்கால சவால்களை எதிர்கொள்வதற்காக தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டும்," என்றார் திரு ஓங்.
புதிய உருமாறிய கிருமிகளால் கடுமையான நோய்கள் அல்லது மரணங்கள் அதிக அளவில் ஏற்
படுமா என்பதையும் அக்கிருமி
களின் தொற்று வேகம் அதிகமாக இருக்குமா என்பதையும்
அதிகாரிகள் உற்று கவனிப்பர் என்றும் அவர் கூறினார்.

