சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான டாக்சி மற்றும் பொதுப் பேருந்துச் சேவைகள் வரும் மே மாதம் 1ஆம் தேதி
யிலிருந்து மீண்டும் தொடங்க இருக்கின்றன.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக இரண்டு ஆண்டு
களுக்கும் மேலாக இந்தச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
எஸ்பிஎஸ் நிறுவனத்தின் பேருந்து எண் 160, 170, 170X ஆகியவற்றுடன் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் 950 பேருந்துச் சேவையும் டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனத்தின் TS1, TS3, TS6, TS8 பேருந்துச் சேவையும் மீண்டும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணச் சேவையை வழங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்காக இந்த மூன்று நிறுவனங்களும் கூடுதல் பேருந்து ஓட்டுநர்களை வேலையில் அமர்த்தி பயணப் பாதை குறித்து அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து வருகின்றன.

