உணவுப் பொருள்களின் உற்பத்திக்கும் புத்தாக்கத்திற்கும் உள்ளூர் சிறிய நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் $13 மில்லியன் செலவில் வசதிப் பகிர்வுக்கூடம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
செனோக்கோ டிரைவ்வில் 1,107 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு உள்ள 'ஃபுட்பிளாண்ட்' எனப்படும் அந்த வசதிக்கூடத்தை சிறிய உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொருள்களைச் சோதிப்பதற்காக சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப அவை கட்டணம் செலுத்தலாம். இதே வசதிகளைப் பெற அத்தகைய சிறிய நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள சுமார் 200 உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 400 புதிய உணவுத் தயாரிப்புகளை மேற்கொள்ள இந்த வசதிப் பகிர்வுக் கூடம் கைகொடுக்கும் என்றும் கருதப்படுகிறது.
எஸ்ஐடி எனப்படும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், எண்டர்
பிரைஸ் சிங்கப்பூர், ஜூரோங் நக ராண்மைக் கழகம் ஆகியன கூட்டாக 'ஃபுட்பிளாண்ட்' புத்தாக்க வசதிக்கூடத்தைத் தொடங்கி உள்ளன. சிங்கப்பூரின் உணவுத்துறைப் புத்தாக்கத்திற்கு இது பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதன் தொடக்க நிகழ் வில் பங்கேற்ற துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், புதிதாக நிறுவப் பட்டுள்ள இயந்திரங்களின் செயல் திறனை சோதித்துப் பார்த்தார்.
இங்குள்ள சாதனங்களை நிறு வனங்கள் பயன்படுத்திக்கொள்ள லாம். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைச் சேவைகளை அவை பெறலாம். மேலும், உணவுப் புத்தாக்கத்திற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் நிறுவனங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம். சிறிய அளவிலான புதிய உணவுப் பொருள்களை சோதித்துப் பார்க்கவும் பயனீட்டாளர்களின் விருப்பத்தை அறிய அவற்றைச் சந்தையில் விற்க வும் வசதிக்கூடத்தை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த வசதிக்கூடத்திற்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உரிமம் வழங்கி இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை வர்த்தக ரீதியாக விற்பனை செய்யலாம்.