தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகை இவ்வாண்டின் முதல் காலாண்டில் படுவேகத்தில் உயர்ந்தது. கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் 2.7 விழுக்காடாக இருந்த அந்த உயர்வு இவ்வாண்டில் 4.1 விழுக்காட்டுக்குச் சென்றது. முதன்மை
வட்டாரத்தில் 3.8 விழுக்காடும் நகரப் பகுதிகளில் 4.7 விழுக்காடும் வாடகை உயர்வு பதிவானது.
அதேநேரம் புறநகர்ப் பகுதிகளில் வாடகை உயர்வு 4 விழுக்காடாக அது இருந்தது என நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது. தனியார் தரை வீடு
களின் வாடகை 5.3 விழுக்காடு உயர்ந்தது. இதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் இது 1.2 விழுக்காடு அதிகம். தனியார் வீடுகளை வாங்கத் திட்டமிட்டிருந்தோர் டிசம்பர் மாதம் அறிமுகம் கண்ட புதிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் வாடகைச் சந்தையை நாடினர்.
அதன் காரணமாக வாடகை வீடுகளுக்கான தேவை அதி
கரித்ததால் வாடகை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. "இரண்டாவது சொத்தை வாங்க விரும்பும் சிங்கப்பூரர்களுக்கான கூடுதல் முத்திரைக் கட்டணம் 12 விழுக்காட்டிலிருந்து 17 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டதால் சில வீட்டு உரிமையாளர்
களுக்கு முதலீட்டு சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
"அதனால் முதல் சொத்தை விற்ற பின்னர் சிறிது காலம் வாடகை வீட்டில் தங்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம்," என்று இஆர்ஏ சிங்கப்பூர் சொத்துச் சந்தையின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவின் தலைவர் நிக்கலஸ் மாக் தெரிவித்தார்.

