நீடித்து நிலைக்கக்கூடிய காற்றாலை எரிசக்தித் திட்டங்களுக்கு உருமாற விரும்பும் கடல்துறை மற்றும் கடலோர பொறியியல் நிறுவனங்கள் இனி அதிக வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
வர்த்தகம் கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முந்திய நிலையை படிப்படியாக எட்டிவரும் நிலையில் கடல்துறை, கடலோரப் பொறி
யியல் துறை அதற்கு முக்கிய படியாக விளங்குகிறது. இத்துறைக்கு உதவ புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் கடல்துறைத் தொழிற்கூடச் சங்கம் நேற்று கூறியது.
புதிய அம்சங்கள் தொடர்பான வாய்ப்புகளை நிறுவனங்கள் சரிவரப் புரிந்துகொள்வதற்கு இத்திட்டம் உதவும் என்றது சங்கம். கடலோர காற்றாலைத் திட்டங்களை உருவாக்கி நடத்துவது எப்படி என் பதை விளக்குவதற்கான பயிற்சி வகுப்பு ஒன்று 26 பொறியாளர்கள், வர்த்தக வளர்ச்சி நிர்வாகிகள் மற்றும் செயல்பாட்டு மேலாளர்கள் ஆகியோருடன் இணைந்து ஏற் படுத்தப்பட்டுள்ளது.

