தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிராஞ்சி வனப்பகுதி அழிப்பு; மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
4299598d-afea-4262-bfe8-fdd807db47a4
-

கிராஞ்சி வனப்­ப­கு­தி­யில் தவ­று­தலா­கக் கூடு­த­லான இடம் அழிக்­கப்­பட்­டது சென்ற ஆண்டு கண்­ட­றி­யப்­பட்­டது. இதன் தொடர்­பில் குற்­றம் சாட்­டப்­பட்ட மூவ­ரில் ஜூரோங் நகராண்மைக் கழக அதி­கா­ரி­கள் இரு­வ­ரும் அடங்­கு­வர்.

நிறு­வ­னத்­தின் அப்­போ­தைய துணை இயக்­கு­ந­ரான சோங் புய் சி மீது பூங்­காக்­கள், மரங்­கள் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் ஏழு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்ளன.

நிறு­வ­னத்­தின் அப்­போ­தைய மூத்த திட்ட மேலா­ள­ரான நியோ ஜெக் லின் மீது அதே சட்­டத்­தின்­கீழ் எட்டு குற்­றச்­சாட்­டு­களும் வன­வி­லங்­குப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் ஒரு குற்­றச்­சாட்­டும் சுமத்­தப்­பட்­டன.

மூன்­றா­வ­தாக, சிபிஜி கன்­சல்­டண்ட்ஸ் நிறு­வன ஊழி­ய­ரான டான் சி சீ மீது பூங்­காக்­கள், மரங்­கள் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் ஐந்து குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

இதில் தொடர்­பு­டைய அவ­ரது சக ஊழி­யர் ஜிம்மி லியு விங் டிம் மருத்­துவ விடுப்­பில் இருப்­ப­தால் மற்­றொரு நாள் அவர்­மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம்­சாட்­டப்­படும்.

வேளாண்-உண­வுப் புத்­தாக்­கப் பூங்­கா­விற்­காக அழிக்­கப்­பட்ட வனப்­ப­குதி குறித்து இயற்கை ஆர்­வ­லர்­களும் இணை­ய­வா­சி­களும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

மே 23ஆம் தேதி வரை இந்த வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.