நீதிமன்ற உத்தரவை மீறியதாக வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு

நீதிமன்ற உத்தரவை மீறியதாக வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு

1 mins read
264e57bb-46bd-4e02-80ca-51eafb00dd69
-

அனு­ப­வ­மிக்க வழக்­க­றி­ஞ­ரான இயூ­ஜீன் துரை­சிங்­கம் மீது நீதி­மன்ற உத்­த­ரவை மீறிச் செயல்­பட்­ட­தாக இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

மருத்­து­வர் இயோ சோ நாமின் வழக்­கில் புகார் அளித்­த­வ­ரின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்­கும் நோக்­கில் இர­க­சி­ய­மாக வைக்­கப்­ப­ட­வேண்­டிய தக­வல்­களை துரை­சிங்­கம் வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்­திற்­கும் ஆகஸ்ட் மாதத்­திற்­கும் இடை­யில் அந்­தத் தக­வல்­களை செய்தி ஊட­கங்­க­ளுக்கு வெளி யிடும்­படி தனது சட்ட நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்த ஜொஹன்­னெஸ் ஹாடி­யி­டம் துரை­சிங்­கம் கூறி­னார். அதன்­படி செயல்­பட்ட ஹாடி மீதும் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­ய­தாக இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

இரு­வ­ரும் அடுத்த மாதம் 20ஆம் தேதி விசா­ர­ணைக்கு முந்­திய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கெ­டுப்­பர். முன்­ன­தாக, சென்ற ஆண்டு ஆகஸ்­டில் மருத்­து­வர் இயோ மீதான வழக்­கில் அவர் குற்­ற­மற்­ற­வர் என்று நிரூ­பிக்­கப்­பட்­டது. அவர் தன்னை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கப் பொய் கூறி­யதை புகா­ர­ளித்த மாது ஒப்­புக்­கொண்­டார்.