பணிக்குழு கூட்டத்தில் நிதி அமைச்சர் வோங்

பணிக்குழு கூட்டத்தில் நிதி அமைச்சர் வோங்

2 mins read
ed2b3b89-9d46-4ee0-9525-bb3fdcd007db
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் (இடது), நிதித்துறை செயல் திட்டப் பணிக்குழு கூட்டத்தில் டி. ராஜ குமாருடன் கலந்து கொண்டார். படம்: நிதி அமைச்சு -

கள்ளப்பணத்தை ஒழிக்க உதவும் உலக அமைப்பு கூடியது

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அமெ­ரிக்­கா­வின் வாஷிங்­டன் நகரில், நிதி செயல்­திட்­டப் பணிக்­குழு அமைப்­பின் அமைச்­சர்­நிலை கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டார்.

உல­க­ள­வில் கள்­ளப்­ப­ணம் புழங்கு­வ­தை­யும் பயங்­க­ர­வா­தி­களுக்குக் பணம் போய் சேர்­வ­தை­யும் கண்­கா­ணிக்­கும் அமைப்­பாக இந்­தச் செயல்­திட்­டப் பணிக்­குழு திகழ்­கிறது.

நிதி அமைச்­சர் ஏப்­ரல் 16 முதல் ஏப்­ரல் 25ஆம் தேதி வரை அமெ­ரிக்க பய­ணம் மேற்­கொண்டு இருக்­கி­றார். அமெ­ரிக்­கா­வில் இந்­தப் பணிக்­கு­ழு­வின் தலை­வர் டாக்­டர் மார்­கஸ் பிளே­யர், கனடா துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான கிறிஸ்­டியா ஃபிரிலாண்ட், பிரிட்­ட­னின் நிதி அமைச்­சர் ரிஷி சுனக் உள்­ளிட்ட தலை­வர்­க­ளை­யும் தான் சந்­தித்­த­தாக ஃபேஸ்புக்­கில் திரு வோங் குறிப்­பிட்­டார்.

திரு டி. ராஜகுமார், உள்­துறை அமைச்­சில் 2015 முதல் மூத்த ஆலோ­ச­க­ராக (அனைத்­து­லக) பணி­யாற்றி இருக்­கி­றார். அவர், அந்த அமைச்­சர்­நிலை கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளும் சிங்­கப்­பூர் குழு­விற்குத் தலைமை ஏற்றுள்ளார்.

திரு ராஜகுமா­ரு­டன் நிதி அமைச்­சர் அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டார். திரு ராஜ குமார் அந்­தப் பணிக்­கு­ழு­வின் தலை­வ­ராக ஜூலை 1ஆம் தேதி முதல் இரண்­டாண்டு காலம் பணி­யாற்ற இருக்­கி­றார்.

அந்­தப் பணிக்­கு­ழு­வின் ஓர் உறுப்­பி­ன­ராக 1992 முதல் சிங்­கப்­பூர் இருந்து வரு­கிறது.

முதன் முத­லாக அந்­தக் குழு­விற்கு சிங்­கப்­பூர் இப்­போது தலைமை ஏற்­கிறது. அந்­தப் பணிக்­குழு உறுப்­பி­னர்­க­ளு­டன் சேர்ந்து சிங்­கப்­பூர் தொடர்ந்து பணி­யாற்­றும் என்று திரு வோங் கூறினார்.

கள்­ளப்­ப­ணத்­தைத் தடுக்­க­வும் பயங்­க­ர­வா­தி­க­ளின் கைக­ளுக்குப் பணம் போய் சேர்­வ­தைத் தடுத்து நிறுத்­த­வும் உல­க­ள­வில் இடம்­பெறும் போராட்­டத்­தில் தனது பங்கை சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆற்­றும் என்­றும் திரு வோங் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.