புது மனநல நிலையம்: இளையருக்கு உதவும்

புது மனநல நிலையம்: இளையருக்கு உதவும்

3 mins read
aaef24f5-131e-46f5-a4e7-c5f2deea81f5
-

நியூட்டனில் திறப்பு; பலரும் வசதியாக சேவையைப் பெறலாம்

நியூட்­ட­னில் புதிய பிர­ாம் நிலை யம் திறக்­கப்­பட்டு இருக்­கிறது. இளை­யர்­கள், பெரி­ய­வர்­க­ளி­டம் அந்த நிலை­யம் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும்.

அதன்­மூ­லம் அதிக இளை­ஞர்­கள் மன­நல உத­வி­யைப் பெற­முடி­யும். அந்த அறப்­பணி நிலை­யத்­தில் அடிப்­படை முழுமன ஈடு பாட்டுடன் கூடிய மன­நிலை பயிற்சிப் படிப்­பில் பல உத்­தி­கள் போதிக்­கப்­ப­டு­கின்­றன.

அதில் இரண்டு ஆலோ­சனை அறை­கள் உள்­ளன. முழு­மன ஈடு­பாடு மீதான பயிற்­சிப் படிப்­பு­களுக்­கான இரண்டு ஆய்­வ­ரங்கு அறை­களும் அங்கு உள்­ளன.

முதி­யோ­ரி­டையே மகிழ்ச்­சி­க­ர­மான, நல­மிக்க வாழ்வை மேம்­படுத்­து­வ­தில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் வகை­யில் இந்த நிலை­யம் முதன்­மு­த­லாக 2012ல் அமைக்­கப்­பட்­டது. இப்­போது நான்கு இடங்­களில் நிலை­யம் செயல்­படு­கிறது. சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி நேற்­றைய புதிய நிலைய திறப்பு நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்­டார்.

அதில் பேசிய டாக்­டர் ஜனில், சிங்­கப்­பூர் படிப்­ப­டி­யாக வழக்­க­நிலைக்குத் திரும்­பு­கிறது என்­றாலும் பல­ரி­டத்­தில் தொடர்ந்து கவலை அல்­லது மனக்­க­லக்­கம் நில­வக்­கூ­டும் என்றார்.

இதை கைக்­கொள்­வ­தில் ஆதரவு அளிக்­கும் வகையில் ஒரு சமூ­கம் உயிர்­நா­டி­யா­ன பணியை ஆற்­ற­லாம் என்றார் அவர்.

மன­ந­லம் பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­களை வழக்­க­மான ஒன்­றாக ஆக்கி, மன­ந­லப் பிரச்­சி­னை­களுக்குத் தீர்­வு­கா­ண்பதற்கான வழி­களை எட்டும்படி அத்­தகைய பிரச்­சினை­களை எதிர்­நோக்­கும் மக்­க­ளுக்கு ஊக்­க­மூட்டி அதன்­மூ­லம் சமூ­கம் ஆத­ரவு அளிக்­கலாம் என்று டாக்­டர் ஜனில் கூறி­னார்.

பிர­ாம் நிலை­யம் சென்ற ஆண்டு டிசம்­ப­ரில் புதிய கலங்­கரை­வி­ளக்­கச் செயல்­திட்­டம் ஒன்றைத் தொடங்­கி­யது என்று இந்த நிலை­யத்தை நிறுவிய இணைப் பேரா­சி­ரி­யை ஏஞ்சி சியூ தெரி­வித்­தார்.

அந்­தச் செயல்­திட்­டத்­தில் மன­நல அறி­வும் நேரடிப் பயிற்சி அம்சமும் உண்டு. பள்­ளி­க­ளுக்­கான கல்வி அறிவுச் செயல்­திட்­டத்­தில் டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யும் ஹார்­வர்ட் மருத்து வப் பள்ளி­யின் மனோ­வி­யல் உதவி பேரா­சி­ரி­யர் சாரா லாஸா­ரும் ஈடுபட்டு இருக்­கி­றார்­கள்.

ஜன­வரி முதல் 1,900 மாண­வர்­களும் 350 ஆசி­ரி­யர்­களும் 50 பெற்­றோ­ரும் அந்தச் செயல் திட்டத்தில் கலந்­து­கொண்டுள்ள னர். 15 வய­தும் அதற்கு அதிக வய­துள்ள மாண­வர்­க­ளுக்கு நேரடி பயிற்­சி­யை­யும் அந்­தச் செயல்­திட்­டம் வழங்­கு­கிறது.

இதன்­மூ­லம் அவர்­கள் வேலை தேர்ச்­சி­க­ளை­யும் மன­நல மீட்­சி­யை­யும் பெற­லாம். டிசம்­பர் முதல் 20 இளை­ஞர்­கள் அதில் கலந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.

சுகா­தார அமைச்­சைச் சேர்ந்த 4,500க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களுக்கு இல­வ­ச­மாக ஆலோ­சனை சேவை­க­ளை­யும் பிராம் நிலை­யம் வழங்­கு­கிறது.

அந்த நிலை­யத்­தில் மன­உளைச்­சலை குறைப்­ப­தற்­கான உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­வர்­களில் டான் டிங் ஸுவான் என்ற 21 வயது இளை­ஞ­ரும் ஒரு­வர்.

இவர் தன்­னு­டைய முத­லாளியை எப்­படி சமா­ளிப்­பது என்­ப­தன் தொடர்­பில் மனக்­கவலை­யு­டன் இருந்­தார். தேசிய சேவை­யின்­போது சட்­டாம்­பிள்ளைத்­தன பாதிப்­பும் இவ­ருக்கு ஏற்­பட்­டது.

இந்த இளைஞர் இப்­போது இந்த நிலை­யத்­தின் நேர­டிப் பயிற்­சிப் படிப்­பில் சேர்ந்து இருக்­கி­றார். இந்நிலை­யத்­தில் நான் கற்ற முழு­மன ஈடு­பாட்­டுப் பயிற்­சிப் படிப்பு என் உட­லில் பதற்­றத்தைக் கண்டு­அறிய எனக்கு உதவி இருக்­கிறது என்று இவர் தெரி­வித்­தார்.

தன்­னைப் போன்ற இளை­ஞர்­களை எட்­டி உதவலாம் என்று இவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.