துவாசில் எண் 31 பினோய் லேன் முகவரியில் உள்ள கட்டடத்தில் நேற்று பிற்பகலில் பெரிய அளவில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
அந்தப் படையினர் அங்கு சென்றபோது முழு கட்டடமும் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது. தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்ததாக அந்தப் படை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்றைப் பார்க்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்துக் கொண்டு இருந்தது தெரிந்தது.
தீ மூண்ட முகவரியில் 'ஆஃப்ஷோர் கன்ஸ்ட்ரக்ஷன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ்' என்ற ஒரு நிறுவனம் பதியப்பட்டுள்ளது.