சிராங்கூன் சாலையில் போதைப் பொருள் வைத்திருந்த நான்கு முதியவர்கள் கைது செய்யப்பட்டனர்

போதைப் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் நான்கு முதியவர்கள் சிராங்கூன் சாலை வட்டாரத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஞாயிற்றுகிழமை (ஏப்ரல் 24) அன்று இதைக் கூறியது.

கைது செய்யப்பட்டவர்கள் 61 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண் ஆவார்.

அதனுடன் சுமார் 735 கிராம் போதைமிக அபின், 254 கிராம் ஐஸ் ஆகியவை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் சந்தை மதிப்பு ஏறத்தாழ 90,000 வெள்ளி என்று மத்திய போதைப்பொருள் பிரிவு கூறியது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) பிற்பகலில் சிராங்கூன் சாலையில் 61 வயது சிங்கப்பூர் ஆடவரை மத்திய போதைப் பொருள் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 245 கிராம் ஐஸ் போதைப் பொருளையும் 3,400 வெள்ளி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதை ஒட்டிய நடவடிக்கையில், 65 வயது பெண், 65 மற்றும் 67 வயதுள்ள இரண்டு ஆண்கள் ஆகியோர் சிராங்கூன் ரோட்டில் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள்.

விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

பதினைந்து கிராம் போதைமிகு அபின், அல்லது 250 கிராம் ஐஸ் போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!