சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் லீ நன்றி தெரிவித்தார்

சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் லீ நன்றி தெரிவித்தார்

2 mins read
d5864a58-65bf-44d2-b59a-0b118668c3bc
-

சிர­ம­மான ஈராண்­டு­க­ளைக் கடந்து சிங்­கப்­பூர் தனது வழக்­க­நி­லைக்­குத் திரும்ப சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் நிபு­ணத்­து­வ­மும் கடப்­

பா­டும் முக்­கிய கார­ணங்­கள் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை நடத்­திய சொற்­பொ­ழிவு நிகழ்­வில் பங்­கேற்­றுப் பேசிய அவர், கொள்­ளை­நோய் காலத்­தில் சிர­மங்­க­ளைத் தாங்கி, பணி­யாற்­றிய 62,000க்கும் மேற்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்கொண்­டார்.

நாளை முதல் பெரும்­பா­லான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்டு, கொள்­ளை­நோ­யு­டன் வாழும் முறைக்கு சிங்­கப்­பூர் மாற­வி­ருக்­கும் நிலை­யில் பிர­த­மர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

"நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் எண்­ணிக்கை வரம்­புக்குட்­பட்­ட­தாக இருந்தபோதி­லும் அவர்­கள் வழங்­கிய பரா­ம­ரிப்­பின் தரம் உயர்ந்­தது. அவர்­கள் தொடர்ச்­சி­யாக முன்­க­ளத்­தில் நின்று உறு­தி­யு­ட­னும் நெகிழ்ச்­சி­யு­ட­னும் பணி­யாற்­றி­னார்­கள்.

"புதிய கிரு­மி­யைப் பற்றி நமக்கு அவ்­வ­ள­வா­கத் தெரிந்­தி­ரா­த­போதே அவர்­கள் இந்­தப் பணி­யில் ஈடு­பட்­டார்­கள்," என்று திரு லீ கூறி­னார்.

மேலும் அவர் குறிப்­பி­டு­கை­யில், "ஆரம்­ப­கட்­டத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் தங்­கு­வி­டு­தி­களில் கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கியபோது மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் மற்ற தொண்­டூ­ழி­யர்­களும் 'அச்­ச­மின்றி' தங்­க­ளது கட­மை­யில் ஈடு­பட்­ட­னர்.

"நாள் முழுக்க முழு­மை­யான மருத்­து­வக் கவச உடையை அணிந்து பணி­யாற்­றி­ய­வர்­களில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் முதன்­மை­யா­ன­வர்­க­ளா­க­வும் வழக்­க­மான பரி­சோ­த­னை­களை நடத்தி பணியை முடித்­துக்­கொள்­ளும் கடை­சிப் பணி­யா­ளர்­க­ளா­க­வும் அவர்­கள் விளங்­கி­னர்.

"இந்த ஈராண்­டு­கள் அவர்­

க­ளுக்­குச் சவால்­மிக்­க­வை­யாக இருந்­தன. வழக்­க­மான நாள்­க­ளைக் காட்­டி­லும் அதிக வேகத்­து­டன் செயல்­படவேண்டி இருந்­தது.

"எனவே, நமது சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வான நமது முயற்­சி­க­ளைத் தொட­ர­வேண்­டும்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

ஈராண்டு கால­மாக பல்­வேறு சுகாதா­ரப் பணி­யா­ளர்­க­ளால் விடுப்பு எடுக்க இய­ல­வில்லை. ஒவ்­வொரு நாளும் நீண்­ட­நே­ரம் அவர்­கள் பணி புரி­யும் நிலை இருந்­தது.

அண்­மை­யில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளி­டையே உள­வி­யல் அடிப்­ப­டை­யி­லான மன அழுத்­த­மும் மனச்சோர்­வும் ஏற்­பட்டு இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டது.

கடந்த ஆண்டின் முதல் பாதி யில் மட்டும் 1,500 பேர் சுகாதாரப் பராமரிப்புப் பணிகளில் இருந்து விலகினார்கள். தற்போது அவர் களுக்கு விடுப்பு வழங்கும் முறை திரும்பி இருக்கிறது.

கொள்ளைநோயின் தொடக்கம் முதல் தொடர்ந்து முன்களத்தில் நின்று பணிபுரிந்தார்கள்