ஈராண்டுக்குப் பின் மீண்டும் இரவு கேளிக்கை, குதூகலம்

ஈராண்டுக்குப் பின் மீண்டும் இரவு கேளிக்கை, குதூகலம்

2 mins read
4f80a5a8-cc9e-436e-9f26-a761755dc754
கேளிக்கைக்கூடத்தினுள் நுழையுமுன் அனைவரிடமும் ஏஆர்டி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: திமத்தி டேவிட் -

மாதங்கி இளங்­கோ­வன்

கேளிக்­கைக்­கூ­டங்­கள் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு செவ்­வாய்­க்

கி­ழமை (ஏப்­ரல் 19) அன்று மீண்­டும் திறக்­கும் செய்தி மக்­க­ளி­டையே எதிர்­பார்ப்பை வர­வ­ழைத்­தி­ருந்­தா­லும் மறு­நாள் அக்­கூ­டங்­களில் கூட்­டம் நிரம்­ப­வில்லை.

புதன்­கி­ழமை வேலை­நாள் என்­ப­தும் ஒரு கார­ணம்.

ஏஆர்டி பரி­சோ­த­னைக்­கான ஏற்­பா­டு­கள் ஒரு சில கேளிக்­கைக் கூடங்­க­ளுக்கு வெளியே இன்­னும் செய்­யப்­ப­டா­த­தா­லும் மக்­கள் இக்­கூ­டங்­க­ளுக்­குச் செல்­லும் திட்­டத்­தைத் தள்­ளிப்­போட்­ட­னர். ஆனால், சில கேளிக்­கைக் கூடங்­களில் வெள்­ளிக்­கி­ழமை நிலைமை மாறி­யது.

'கிளப் ரூமர்ஸ்' கேளிக்­கைக் கூடத்­துக்கு இரவு 11 மணி முதல் அதி­காலை 3 மணிவரை வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் நண்­பர்­க­ளோடு திர­ளாக வந்­த­தை தமிழ் முரசு கண்­டது.

உள்ளே நுழை­யும் முன்பு ஏஆர்டி பரி­சோ­த­னை­யைச் செய்ய ஒரு குறிப்­பிட்ட இடம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இரு ஊழி­யர்­க­ளின் மேற்­பார்­வை­யில் அந்­தப் பரி­சோ­த­னை­யைச் செய்து 15 நிமி­டங்­கள் காத்­தி­ருந்த பின்பு, அவர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று உண்டா இல்­லையா என்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

மது அருந்­தும்­போது மட்­டும் முகக்­க­வ­சத்தைக் கழற்­ற­லாம் என்­றும் நடன மேடை­யில் ஆடும்­போது அதனை அணிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் 'கிளப் ரூமர்ஸ்' இயக்­கு­ந­ர் மகேஸ்­வரி ஜெக­நா­தன் கூடத்­தின் வாச­லி­லேயே வாடிக்­கை­யாளர்­க­ளி­டம் அறி­வித்­தார்.

நிகழ்ச்சி பெரி­தும் ஈர்த்­தா­லும் நட­ன­மா­டும்­போது முகக்­க­வ­சம் அணிய வேண்­டிய கட்­டா­யம் பலரை தங்­கள் மேசை­க­ளின் அரு­கிலேயே இருக்க வைத்­தது.

ஈராண்­டு­க­ளாக டிஜே வேலை­யில் ஈடு­ப­டாத கார­ணத்­தால் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பாடல்­களை தேர்ந்­தெ­டுக்கவேண்­டி­ய­போது சில சம­யங்­களில் எந்­தப் பாட­லைப் போடு­வது என தடு­மா­றி­ய­தா­கக் கூறி­னார், ஜீவன் சந்­தி­ரன், 32.

கூடிய விரை­வில் இக்­கூ­டங்­களில் கூட்­டம் அதி­க­மா­கும் என்று எதிர்­பார்த்­தா­லும், ஏஆர்டி பரி­சோ­த­னைக்­கு­ அ­திக கட்­ட­ணம் செலுத்­த­வேண்­டிய கார­ணத்­தால் சிலர் வரத் தயங்­கு­வர் என்றார் அவர்.