கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் சிங்கப்பூரில் பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டபோதும் ஊழியர்கள் தொடர்ந்து புதிய திறன்களைக் கற்றுக்கொண்டதாகக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் அறிக்கை தெரிவித்தது.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் கிட்டத்தட்ட பாதி பேர், கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் தங்களின் வேலை சார்ந்த இலக்குகள் மாறியதாகக் கூறினர். சிலர் தாங்கள் இருக்கும் துறையை மாற்றிக்கொள்வது குறித்தும் ஆலோசித்தனர்.
தங்களின் வேலையில் உதவும் புதிய திறன்களைக் கடந்த ஈராண்டுகளில் கற்றுக்கொண்டதாகக் கருத்தாய்வில் பங்கேற்றோரில் 51 விழுக்காட்டினர் தெரிவித்தனர். குறிப்பாக 30லிருந்து 39 வயதுக்கு இடைப்பட்டோர், பட்டக்கல்வி மேற்கொண்டிருப்போர் உள்ளிட்டோரிடையே இந்த கருத்து இருந்தது.

