இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு

இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு

3 mins read
e8f20982-5999-45d8-a1c7-3dc33b94ecca
-

சிங்­கப்­பூ­ரில் இன்று முதல் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் பெரிய அள­வில் தளர்த்­தப்­ப­டு­கின்­றன. மேலும், ஈராண்டுகளுக்குப் பிறகு முதன்­மு­றை­யாக 'டோர்ஸ்­கோன்' எனப்­படும் கிரு­மித்­தொற்று எச்­ச­ரிக்கை குறியீட்டின் நிறம் இன்று முதல் ஆரஞ்­சி­லி­ருந்து மஞ்­ச­ளுக்­குக் குறைக்­கப்­ப­டு­கிறது.

இன்று முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில் சில:

வரம்­பின்றி ஒன்­று­கூ­ட­லாம்,

பாதுகாப்பு இடை­வெளி இல்லை

இன்று முதல் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்­லாத நட­வ­டிக்­கைளை மேற்­கொள்­ளும்­போ­தும் வரம்­பின்றி எத்­தனை பேரு­டன் வேண்­டு­மா­னா­லும் ஒன்­று­கூ­ட­லாம். வீட்­டிற்கு வரும் விருந்­தி­னர்­க­ளின் எண்­ணிக்­கைக்­கும் வரம்பு கிடை­யாது. திரு­ம­ணங்­கள், இறு­திச் சடங்கு­கள் போன்­ற­வற்­றுக்­கும் இது பொருந்­தும். மேலும், உள்­ள­ரங்­கு­களி­லும் வெளிப்­பு­றங்­க­ளி­லும் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பிடிக்­கத் தேவை­யில்லை.

எல்லா ஊழி­யர்­களும் வேலை­இடங்­க­ளுக்­குத் திரும்­ப­லாம், சில வேளைகளில் முகக்கவசம் தேவையில்லை

இது­வரை வீட்­டி­லி­ருந்து வேலை பார்த்த அனை­வ­ரும் மீண்­டும் வேலை­யி­டங்­க­ளுக்­குச் செல்­ல­லாம்.

வேலை­யி­டங்­களில் பிற­ரு­டன் தொடர்­பு­கொள்­ளா­த­போது முகக்­கவசம் அணி­யத் தேவை­யில்லை. எனினும், வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்­ளும் பணி­யில் இருப்­போ­ருக்கு இது பொருந்­தாது.

1,000 பேருக்கும் அதி­க­மா­னோர் பங்­கேற்­கும் நிகழ்ச்­சி­க­ளுக்கு வரம்பு இல்லை

1,000 பேருக்­கும் அதி­க­மா­னோர் இடம்பெறக்கூடிய பெரிய நிகழ்ச்சி­களில் இனி வரம்­பின்றி பங்­கேற்­பா­ளர்­கள் கலந்துகொள்ளலாம்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுக்­கொண்ட பயணிகளுக்கு கொவிட்-19 பரிசோதனை தேவை­யில்லை

நிலம், கடல், ஆகா­யம் ஆகி­ய­வற்­றின் வாயி­லாக சிங்­கப்­பூ­ருக்கு வரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் இனி பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்னர் கொவிட்-19 பரி­சோ­த­னை­யை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை.

பல இடங்­களில் தடுப்­பூசி போட்டுக்­கொள்­ளா­தோ­ருக்­கு மாறு­பட்ட விதி­மு­றை­கள் இல்லை

திரு­ம­ணங்­கள், கலந்­து­ரை­யாடல்­கள், மாநா­டு­கள் போன்ற 500க்கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொள்­ளும் நிகழ்ச்­சி­க­ளைத் தவிர மற்ற இடங்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்­கான மாறு­பட்ட விதி­மு­றை­கள் விலக்­கப்­பட்­டுள்­ளன. அத­னால் பெரும்­பா­லான இடங்­களில் 'டிரேஸ்­டு­கெ­தர்' கரு­வி­யைக் கொண்டு 'சேஃப்என்ட்ரி' பதி­வு­செய்­யத் தேவை­யில்லை.

உணவு, பானக் கடை­களிலும் தடுப்பூசி போட்டுக்கோதோருக்கு மாறுபட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றுக்குச் செல்ல 'சேஃப்என்ட்ரி' பதி­வு­செய்­யத் தேவை­யில்லை.

சுகாதார அபாய குறிப்பு இல்லை

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ருடன் நெருங்­கிய தொடர்பு உள்­ள­வர்­க­ளுக்கு சுகா­தார அமைச்சு இனி 'ஹெச்­ஆர்­என்' எனும் சுகா­தார அபா­யக் குறிப்பை வழங்­காது.

கூடு­தல் வெளி­நாட்டு ஊழியர்கள் சமூ­கத்­திற்­கு வரலாம்

இனி வார நாள்களில் அதிகபட்சமாக 25,000 வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்திற்குள் வரலாம்.வார இறுதி நாள்­க­ளி­லும் பொது விடு­முறை நாள்­க­ளி­லும் இந்த எண்­ணிக்கை 50,000க்கு உயர்த்­தப்­பட்டுள்­ளது.

கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து பொதுமக்கள் சிலர் தமிழ் முரசிடம் கருத்து தெரிவித்தனர்.

"கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தால் என்­னால் என் நண்­பர்­களை இனி ஒன்­றாக சந்­தித்து பேசமுடி­யும். முன்­பெல்­லாம் ஐந்து பேர், 10 பேர் என்ற கட்­டுப்­பாடு இருந்­த­தால் அனை­வரும் ஒன்­றாக சந்­தித்து பேசி மகிழ முடி­ய­வில்லை. இப்­போது நான் அனை­வ­ரை­யும் பார்த்து மகி­ழ­லாம்," என்று சென்ற ஆண்டு தொடக்கக் கல்லூரி படிப்பை முடித்த 18 வயது அக்ஷயா அய்­யா­கண்ணு கூறினார்.

"நாம் இந்­தத் தளர்­வு­களை மன­மு­வந்து வர­வேற்­கி­றோம். இருந்­தா­லும் பாது­காப்­பு­ட­னும் விழிப்­பு­டனும் இருத்­தல் அவ­சி­யம். ஒன்று­பட்டு இணைந்து பாது­காப்­பான சமூ­கத்­தைப் பேணு­வோம்," என்று ஆசிரியராகப் பணியாற்றும் 36 வயது கலை­வாணி இளங்கோ சொன்னார்.

கூடு­தல் செய்தி:

ஹர்­ஷிதா பாலாஜி