நினைவிழப்பு நோயால் ஆசியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த புதிய நிலையம் திறந்த என்டியு

நினைவிழப்பு நோயால் ஆசியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த புதிய நிலையம் திறந்த என்டியு

2 mins read
e20f8fa9-7c02-4b64-8b99-2cb2cfb45275
புதிய சிங்கப்பூர் நினைவிழப்பு ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை முறையைச் செய்து காட்டுகிறார் மருந்தியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளரான திருவாட்டி கோ செங் லிங் (இடது).படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நினை­வி­ழப்பு நோயால் ஆசி­யர்­

க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் (என்­டியு) புதிய நிலை­யம் ஒன்­றைத் திறந்­துள்­ளது.

ஆசி­யர்­க­ளுக்கு நினை­வி­ழப்பு நோய் ஏற்­ப­டு­வ­தற்கு முன்பு அவர்­

க­ளது மூளை­யில் ஏற்­படும் மாற்­றத்தை ஆய்வு செய்ய புதிய நிலை­யம் பயன்­ப­டுத்­தப்­படும்.

ஒரு­வ­ருக்கு நினை­வி­ழப்பு நோய் ஏற்­படும் அபா­யம் உள்­ளதா என்­பதை முன்­கூட்­டியே தெரிந்­து­கொள்­ள­வும் நோய் ஏற்­ப­டு­வ­தைத் தாம­திக்­க­வும் தேவைப்­படும் உத்­தி ­க­ளைக் கண்­டு­பி­டிப்­பதே நிலை­யத்­தின் இலக்கு.

எனவே, நினை­வி­ழப்­புக்­கான அறி­கு­றி­கள் உள்­ள­வர்­களை ஆய்வு செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ளது.

சிங்கப்பூர் நினை­வி­ழப்பு ஆய்வு நிலை­யம் என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள புதிய நிலை­யத்­தின் திறப்பு விழா­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வச் சேவை­கள் இயக்­கு­நர் கென்­னத் மாக் கலந்­து­கொண்­டார். சிங்­கப்­பூ­ரில் 60 வய­தும் அதற்­கும் மேற்­பட்­ட­வர்­களில் பத்­தில் ஒரு­வ­ருக்கு நினை­வி­ழப்பு நோய் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நினைவிழப்பு நோயை எதிர்கொள்வதில் சுகாதார அமைச்சு பல்முனை அணுகு முறையைக் கடைப்பிடிப்பதாக இணைப் பேராசிரியர் மாக் கூறினார். நினை­வி­ழப்பு நோய் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, சமூ­கத்­தி­லும் மருத்­து­வ­

ம­னை­க­ளி­லும் பரா­ம­ரிப்பு ஆற்­றலை மேம்­ப­டுத்­து­வது, நினை­வி­ழப்பு நோயா­ளி­க­ளு­டன் வசித்து அவர்­

க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்கு

ஆத­ரவு வழங்­கு­வது ஆகி­யவை அதில் அடங்­கும்.

"நினைவி­ழப்பு நோயின் அறி­

கு­றி­களை ஆரம்­ப­கட்­டத்­தி­லேயே அடை­யா­ளம் காணா­விட்­டால் பிறகு உதவ முடி­யா­மல் போய்­வி­டும். நினை­வி­ழப்பு நோயை எதிர்­கொள்ள மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு இதுவே கடு­மை­யான சவா­லாக உள்­ளது.

"மூளை­யில் உள்ள உயி­ர­ணுக்­களை இழந்­து­விட்­டால் அதை மீண்டும் மீட்­கவோ உயிர்ப்­பிக்­கவோ முடி­யாது," என்று புதிய நிலை­யத்­தின் இயக்­கு­ந­ரான இணைப் பேரா­சி­ரி­யர் நாகேந்­தி­ரன் கந்­தையா தெரி­வித்­தார். நினைவிழப்பு நோய் ஏற்படுவதற்கு முன்பு ஒருவருக்கு 30 வயதிலேயே மூளையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றார் அவர்.