சிங்கப்பூரின் குடும்பப் பிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் எஸ்ஜி குடும்பப் பற்றுறுதியை திருமணங்கள் மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கான செயல் கூட்டணி நேற்று அறிமுகப்படுத்தியது.
"எனது குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த நான் கடப்பாடு கொள்கிறேன். ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்பது.
"குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க நேரம் ஒதுக்குவது, குடும்பத்தினரிடம் அன்பு, கனிவு, அக்கறை காட்டுவது, குடும்பத்
தினரை மதித்து நடப்பது (குறிப்பாக எங்களுக்குள் பிரச்சினை எழுந்து அதற்குத் தீர்வு காணும்போது), கிடைத்த உறவுக்கு நன்றி யுடன் இருப்பது, மகிழ்ச்சியான தருணங்களிலும் சவால்மிக்க காலகட்டங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது ஆகியவற்றின் மூலம் குடும்பப் பிணைப்பை வலுப்
படுத்த உறுதி கொள்கிறேன்," என்பதே அந்த பற்றுறுதி.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் கவனம் செலுத்துவதும் தங்கள் குடும்பப் பிணைப்பை எவ்வாறு வலுப்
படுத்துவது என்பது குறித்து தனி
நபர்களை யோசிக்க வைப்பதும் இந்தப் பற்றுறுதியின் இலக்கு என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
இந்தப் பற்றுறுதியை வரும் ஜுன் மாதம் நடைபெற இருக்கும் தேசிய குடும்ப வாரம் போன்ற பொருத்தமான நிகழ்வுகளின்போது
எடுத்துக்கொள்ளலாம் என்று
திருவாட்டி சுன் தெரிவித்தார்.

