பொதுப் போக்குவரத்து மன்றத்தின் முதல் பெண் தலைவராக சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனட் ஆங் நியமிக்கப்பட்டுள்ளார். மன்றத்தின் முன்னாள் தலைவர் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
மன்றத்தின் புதிய தலைவர் என்கிற முறையில், கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிந்திய காலகட்டத்தில் நடத்தப்படும் பொதுப் போக்குவரத்துக் கட்டண மறுஆய்வை திருவாட்டி ஆங் மேற்பார்வையிடுவார்.
மன்றத்தில் தலைவராக திருவாட்டி ஆங்கையும் மன்றத்தின் உறுப்பினர்களாக 15 பேரையும் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று நியமித்தார். இவ்வாண்டு மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள்
அப்பதவிகளை வகிப்பர். பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைத் தொடர்ந்து கட்டுப்படியான விலையில் வைத்திருக்க திருவாட்டி ஆங் செயல்படுவார் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.

