இயோ சூ காங் சந்திப்பு ஒன்றில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இரண்டு கார்களும் ஒரு வேனும் சம்பந்தப்பட்ட விபத்தில் கார் ஓட்டுநரான 52 வயது ஆடவரும் காரில் பயணம் செய்த 49 வயதுப் பெண்ணும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
அங் மோ கியோ அவென்யூ 5ம் இேயா சூ காங் ரோடும் சந்திக்கும் இடத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 8.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விபத்து தொடர்பான விசாரணை தொடருகிறது.
இந்த விபத்து தொடர்பான காணொளிப் படங்கள் டிக்டோக் சமூக ஊடகத்தில் அதிகம் வலம் வந்தன.

